Sunday, December 10, 2017

பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 143 சிறுவர்களுக்கான மூன்றாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு 07.12.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.

Tuesday, December 05, 2017

G.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் பாட அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்படும் இக்கருத்தரங்குகள் பாடத்தில் தேர்ச்சி பெற்ற திருகோணமலை வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 08, 2017

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - புகைப்படங்கள்


மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2017 அன்று கப்பல்துறை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.  திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்  தொற்றாநோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி Dr. சிந்தியா அவர்கள் இக்கருத்தரங்கில்  வளவாளராக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 07, 2017

‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005

தம்பலகாமம் கல்வெட்டு

பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில்  ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.

Wednesday, November 01, 2017

இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் சம்பூர் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் 25.10.2017 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

Friday, October 27, 2017

முடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமூகத்தின் பல தொல்மரபுகள் அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். இதுவரை அறியப்பட்ட இக்கிராமத்தின் கல்விப்பாரம்பரியம் தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களில் இருந்து தொடங்குகிறது. 17ஆம் நூற்றாண்டளவில் அவரால் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 26, 2017

பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்



போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 141 சிறுவர்களுக்கு இரண்டாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு   25.10.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.


Tuesday, October 17, 2017

இலக்கந்தையில் குழாய்க் கிணறுகள் திருத்தியமைப்பு - புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.



Sunday, October 15, 2017

'The Border ' - இன்று (15.10.2017) சரஸ்வதி திரையரங்கில் மாலை 5 மணிக்கு


 'The Border '  ( குறும்படம் ) திருகோணமலை மக்களுக்கான திரையிடல். 
ஞாயிறு (15.10.2017)
பி.ப 5 மணிக்கு 
திருகோணமலை சரஸ்வதி திரையரங்கம்

சினிமா இரசிகர்கள் அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம். அனுமதி இலவசம்.

Wednesday, October 11, 2017

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பாடல் - காணொளி


கிழக்கிலங்கையில் திருகோணமலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வருடாவருடம் நடைபெறும் கேதாரகௌரி விரத பூசை ஆராதனை உலகப்பிரசித்திபெற்றது.

Wednesday, October 04, 2017

நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.

Wednesday, September 20, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்விக்கான உதவிகோரல்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

Monday, September 18, 2017

கன்னியா வெந்நீரூற்று 2017 - புகைப்படப் பதிவு


திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தரிசனம் (17.09.2017) புகைப்படப் பதிவாக பகிரப்படுகிறது. கன்னியா வெந்நீரூற்று தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இணையவெளியில் தாராளமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 12, 2017

காத்துக் கிடக்கும் அரசியற்களம் பாட்டாளிபுரம்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்தில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் காணப்படும் போசாக்கின்மை  தொடர்பான 


என்ற பதிவின் தொடர்ச்சியாகவும், அந்த நிலைக்கான காரணங்களில் ஒன்றான கடந்த பல வருடங்களாக மறுக்கப்பட்டுவரும் சமுர்த்தி தொடர்பாகவும் இப்பதிவு அமைகிறது.

Thursday, September 07, 2017

திருகோணமலையில் அகழ்வாய்வுப் பணிகள்


திருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை

1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்
2. கந்தளாய்ச் சிவாலயம்
3. திருமங்கலாய்  சிவாலயம் என்பனவாகும்.

Wednesday, September 06, 2017

பாட்டாளிபுரத்தில் சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 126 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (25.08.2017) பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.

Saturday, August 12, 2017

அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம்


உலக சைவ இளைஞர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இடம்பெற்ற அறநெறிக் கல்விக்கான வெள்ளிக்கிழமைப் பிரகடனம் எனும் நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஊடாக ஆன்மீக, சமூக, பொருளாதார முன்னேற்றம் எனும் நோக்கிலான சில முன்மொழிவுகள் இவை.

Thursday, August 03, 2017

இளங்கலைஞர் விருது 2017 - புகைப்படங்கள்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆவணமாக்கல் துறைக்காக இளங்கலைஞர் விருது எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியும் , உற்சாகமும் தருவதாய் இருக்கிறது.

Wednesday, July 26, 2017

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு Australian Medical Aid Foundation (AMAF) இனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் 25.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

Saturday, July 22, 2017

பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னர் வாய்த்திருந்தது. சிலவருடங்களுக்கு முன்னர் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நண்பன் Dr. இளங்கோவுடன் பாட்டாளிபுரம் சென்றுவந்ததன் பின்னர் இதுவே எனது இரண்டாவது பயணம்.

Friday, July 21, 2017

கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017


கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.

Wednesday, July 19, 2017

நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்

 இது குளக்கோட்டன் சமூகம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.

Wednesday, July 12, 2017

துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்


திருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.

Thursday, July 06, 2017

கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.

Saturday, July 01, 2017

2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்


30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.

Friday, May 19, 2017

மகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-2017


மகுடம் 5வது ஆண்டு மலர்
(இரட்டைச் சிறப்பிதழ்)
பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ்
வெளியீட்டு விழாவும் விவரண அரங்க ஆற்றுகையும் அழைப்பிதழ்.
=================================
ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதன் முறையாக மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ் இரட்டைச் சிறப்பிதழாக எதிர்வரும் 21-05-2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மட்/ மாநகரசபை நகர மண்டபத்தில் மட்/மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

Monday, May 15, 2017

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி - புகைப்படங்கள்


மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால்  இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 26, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


விசேட தேவையுள்ள குழந்தைகளின் கற்றல் ,சமூக, பொருளாதார விடையங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு திருகோணமலையில் செயற்பட்டுவரும் நிறுவனம்  HOPE நிறுவனமாகும்.

Friday, April 07, 2017

கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்


1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.

Saturday, March 25, 2017

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் - புகைப்படங்கள்


தி/தி.விபுலானந்தா கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் 12/3/2017 அன்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்நிகழ்வின்போது விபுலானந்தா கல்லூரியில் தரம் 13 இல் கல்வி கற்கும் செல்வன் பாலேந்திரராஜா சிவஜெயனால் admin@geevanathy.com க்கு அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

Tuesday, March 21, 2017

டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை (Dengue NS1 antigen)


காய்ச்சல் தொடங்கிய முதல் நாளே (100°F க்கு மேலான இரண்டு தடவையாவது காய்ச்சல் இருந்தால் / சாதாரணமாக 12 மணி நேரங்களில பின்னர்) டெங்கு வைரசுக்கான விசேட பரிசோதனை  (Dengue NS1 antigen) மூலம் அறிந்து முன்னெச்சரிக்கையுடன் மருத்துவ சிகிச்சை பெறமுடியும். இங்கு இருக்கும் ஒரே பிரச்சனை அதன் விலைதான்.

Monday, March 20, 2017

டெங்கு காய்ச்சல் - நாம் செய்ய வேண்டியது என்ன


டெங்கு காய்ச்சல் (Dengue fever) டெங்கு வைரசால் ஏற்படுகின்றது. இந்த வைரசில் நான்கு வகைகள் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை வகைகள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான பெயர்களால் அழைக்கப்படும். இவற்றில் வகை இரண்டு மற்றும் நான்கு வீரியம் கூடியவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

Thursday, March 16, 2017

டெங்கு காய்ச்சல் (Dengue fever) - திருமலை நிலவரம் 15.03.2017


நாடுமுழுவதும் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) தாக்கம்  இந்த ஆண்டின்  (2017) தொடக்கத்தில் இருந்து அதிகரித்துக் காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவகையில் டெங்கு காய்ச்சலின் (Dengue fever) பாதிப்பு உணரப்படுகிறது.

Saturday, February 18, 2017

இலங்கை நிர்வாக சேவையில் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு 20.03.2017



இலங்கை நிர்வாக சேவையின் தரம் III இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.

Wednesday, February 15, 2017

அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்


தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள்  அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.