Monday, December 21, 2009

நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / Novel Influenza A H1 N1


இலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'

இது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.

இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.

Tuesday, December 15, 2009

ஆனந்தவெளி வலைப்பூ


சண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.

Tuesday, December 08, 2009

வீடு - ஞாபகச்சிதறல்


புலம் பெயர்ந்தவர்கள், இந்திய ஏதிலி முகாம்களில் இருப்பவர்கள் , எங்கென்றும் தெரியாமல் காணாமல் போனவர்கள் , நாடுகடக்கையில் சிறைப்பட்டுப் போனவர்கள் என்று நீண்டு செல்லும் வகைப்பாடுகளில் நாங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக கருதப்படுகிறோம். பெயரில் இத்தனை பிரிவுகளிருந்தாலும் ஒருவகையில் நாங்களனைவரும் வீட்டில் இருந்து பிரிக்கப்பட்டவர்கள் என்னும் வகைப்பாட்டில் வருபவர்கள்.

Thursday, December 03, 2009

தாமரைத்தீவான்

தாமரைத்தீவான்
'தீர்த்த நாளான இன்று
ஒரு நூல் கோர்த்தநாளானது '

1981 ஆம் ஆண்டு தீர்த்தக் கரையில் அமரர் தம்பலகாமம் . க. வேலாயுதம் அவர்களால் பாடப்பட்ட தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது தாமரைத்தீவான் அவர்களால் பாடப்பட்ட பாவின் முதலிரு வரிகளிவை. இந்நிகழ்வின் போது நான் சிறுபிராயத்தவனாகையால் பின்னாளில் அப்பாடலை அப்பா வைத்திருந்த ஒலிப்பதிவில் இருந்தே கேட்டேன்.தமிழ் அவர் நாவில் தவழும் விதமே அலாதியானது. அக்கவிவரிகள் இன்றும் எனக்கு அவர்குரலில் ஞாபகம் இருக்கிறது.