Saturday, December 18, 2021

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் - வரலாறும், வழமைகளும் - நிலாந்தினி செந்தூரன்



  ஒரு சமூகம் தன் பண்பாட்டையும், நம்பிக்கைகளையும் அடையாளப்படுத்த முனையும் போது அங்கு ஆலயம் துளிர்விட்டுத் தளைக்கின்றது. பண்பாடும், நம்பிக்கைகளும் என்ற  இரு எளிமையான சொற்களுக்குள் ஒரு சமூகத்தின் மிக பெரிய தொன்மம் வித்துக்களாக புதைந்திருக்கும். இந்திய ஞான மரபுகளில்  கிளர்ந்தெழுந்த ஆலயங்கள்   நெஞ்சுருகி ஆணவங்களைக் கரைத்து முத்திக்கு வழிதேடும் கூடங்கள்  என்ற மனச்சித்திரமே நமது பொது பண்பாட்டில் உண்டு.  ஆனால், அங்கு தான்  இசையும் நாட்டியமும் செவ்வியலாகின. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு செறிவூட்டின. சிற்பங்கள் பேச ஆரம்பித்தன.  கட்டடக் கலையின் பெருமையாக கோபுரங்கள்  உயர்ந்து நிமிர்ந்து நிற்கத் தொடங்கின.   மலைகள், நதிகள், விருட்சங்கள் என இயற்கையோடு ஒட்டியதாக எழுந்த ஒவ்வொரு தலங்களும் மானுட வரலாற்றையும், சிந்தனைகளையும் உரத்து கூவத் தொடங்கின.  விருட்ச வழிபாடு சைவ நெறிக்குள் உள்வாங்கப்பட்ட காலத்தில் இருந்து ஆலயங்கள் பல விருட்ச அடைமொழியுடன் சேர்த்து அழைக்கும் மரபும் உருவாகத் தொடங்கியது.   இந்து  வழிபாட்டு மரபில் ஒவ்வொரு மூலவரும், தலங்களும் விருட்சங்களினால் அடையாளப்படுத்தப்படுவது பொது  வழக்காகியது. ‘கொக்கட்டிச் சோலை’  தான்தோன்றீஸ்வரம் விருட்சத்தினால் அடையாளப்படுத்தப்படும் கிழக்கின் தொன்மை மிகு ஈஸ்வரமாகும்.

Wednesday, December 01, 2021

கிழக்கின் பழங்குடிகள் - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

திருகோணமலை வரலாற்றினை வரலாற்றுத் திருகோணமலை, காலனித்துவ திருகோணமலை, இது குளக்கோட்டன் சமூகம் போன்ற நூல்கள் ஊடாக பதிவு செய்திருந்த வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களால் 2020இல் வெளியிடப்பட்ட கிழக்கின் பழங்குடிகள் என்ற நூலினை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

Sunday, November 28, 2021

திருகோணமலையில் முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி - புகைப்படங்கள்

 

மெய்க்கீர்த்தி என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டு என்பதாகும். பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவற்றைச் செப்பேடுகளில் பொறித்து வைத்திருந்தனர். எனினும் அவற்றுக்கு மெய்க்கீர்த்தி எனப்பெயரிட்டு, அச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்து ஒருபுரட்சிகரமான மாற்றத்தை, அறிவியல் பூர்வமான அணுகுமுறையை முதன்முதலில் செய்தவர் பேரரசன் முதலாம் இராசராசன்

Tuesday, June 08, 2021

திருகோணமலை வரலாற்றில் சில துளிகள் - புகைப்படங்கள்

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த நிகழ்வு  01.May.1639

1639 ஆம் ஆண்டு திருகோணமலை கோட்டை கைப்பற்றப்பட்டது தொடர்பில் இதற்கு முன்னர் திருகோணமலை கோட்டை கல்வெட்டு என்ற பதிவில் விரிவாகப் பார்த்திருந்தோம்.

அந்தப் பதிவில் சொல்லப்படாத ஒரு முக்கிய விடயம் இது. போர்த்துக்கேயரின் ஆட்சியின் கீழிருந்த திருகோணமலை கோட்டையை கைப்பற்றுவதற்காக ஒல்லாந்துக் கடற்படையும் அவர்களுக்கு உதவியாக கொட்டியாரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலிருந்து தமிழ் வன்னிச் சிற்றரசர்களும் தயார் நிலையில் இருந்தன.