Wednesday, October 21, 2015

கப்பல்துறையில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கும் இளைஞர் கழகத்திற்கு 16.10.2015 அன்று விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு செய்யப்பட்டது. பிரித்தானியாவில் வசிக்கும்  திரு. ஏரன் அரசசிங்கம் (MR. AARAN ARASASINGAM) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினர் வழங்கி வைத்தனர்.

Tuesday, October 20, 2015

நன்றி கலைக்கேசரி - புகைப்படங்கள்


வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய்.  இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;,  8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள். 

Monday, October 19, 2015

Dr.ஸதீஸ்குமாரின் நூல் வெளியீட்டு நிகழ்வு - புகைப்படங்கள்


வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்கள் எழுதிய “அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாறும் மகிமையும்” என்ற நூலின் வெளியீட்டுவிழா 12.10.2015, திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் கவிஞர்.க.யோகானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Sunday, October 18, 2015

தேசிய சேமிப்பு வங்கியில் வேலைவாய்ப்பு


தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் (Marketing Assistant- I) பதவி வெற்றிடம்.

Thursday, October 15, 2015

நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்


திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

Friday, October 09, 2015

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 11.10.2015


தம்பலகாமத்தில் இரு நூல்களின் வெளியீட்டு விழா.
(11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி )

திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.