Sunday, June 13, 2010

"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service"



என்ற கவிதைக்கு வந்திருந்த பின்னூட்டம் தேவை கருதி பதிவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சுனாமி வருவதாக செய்திகள் வருவதுண்டு. அந்த வேளைகளில் இந்த முகவரி http://www.iibc.in/itws/ நமக்கு துணைபுரியுமென நம்புகிறேன்.. திரு.Muhammad Ismail .H, PHD, அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் ஜீவன்

பின்னூட்டம்.....

// இழப்புகள் பெரிதாய் வரும்வரை
புரிவதில்லை உயிர்இருப்புகளின் பெறுமதி //
.
நச் கவிதை மற்றும் கருத்துகள். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு.
.
இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.iibc.in/itws/

with care and love,
Muhammad Ismail .H, PHD