முழுமையாக விரட்டிவிட முடியாதபடி எனது கண்களின் ஓரத்தில் நித்திரை குடியிருந்தது. குளியலறைச் சத்தங்களையும் தாண்டி மகளின் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது. மனைவி குசினிக்குள் தேனீர் தயாரித்தபடி திட்டிக்கொண்டு இருந்தாள்.
இருட்டு நேரத்தில இப்ப என்ன அவசரத்துக்கு இவள் விழுந்து கெட்டு போகணும் எண்டு அடம்பிடிக்கிறாள். வயசுக்கு வந்த பொம்பிளப்பிள்ளை எண்ட ஒரு பயமும் இல்லை. எல்லாம் இந்த மனுசன் கொடுக்கிற இடம். எல்லா சத்தங்களையும் தாண்டி மனைவியின் பேச்சும் சலிப்பும் மிகத்தெளிவாக கேட்டுக்கொண்டிருந்தது.