Wednesday, July 26, 2017

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


பாட்டாளிபுரம் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு Australian Medical Aid Foundation (AMAF) இனால் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் 25.07.2017 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

Saturday, July 22, 2017

பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. – புகைப்படங்கள்


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான பாட்டாளிபுரத்திற்கு பயணிக்கும் வாய்ப்பு இருவாரங்களுக்கு முன்னர் வாய்த்திருந்தது. சிலவருடங்களுக்கு முன்னர் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நண்பன் Dr. இளங்கோவுடன் பாட்டாளிபுரம் சென்றுவந்ததன் பின்னர் இதுவே எனது இரண்டாவது பயணம்.

Friday, July 21, 2017

கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017


கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.

Wednesday, July 19, 2017

நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்

 இது குளக்கோட்டன் சமூகம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.

Wednesday, July 12, 2017

துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்


திருகோணமலையின் நகரப்பகுதியில் இருந்து சுமார் 40 Km தூரத்தில் அமைந்திருக்கும் வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய். இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;, 8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள்.

Thursday, July 06, 2017

கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.

Saturday, July 01, 2017

2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்


30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.