Wednesday, April 30, 2014

மூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்


வரலாற்றைத் தேடும் பயணங்களில் பல சுவையான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் அவர்கள் வெருகலில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2'  திருகோணமலையில் வெளியிடப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து இந்தப் பயணம் ஆரம்பித்தது.

Wednesday, April 23, 2014

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

பண்­ணகம் என அழைக்­கப்­பட்ட மாத்­தளை மாந­கரில் மிகப்பழை­மையும், சிறப்பும் மிக்க ஆல­ய­மாக ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலயம் விளங்­கு­கின்­றது. இவ்­வா­ல­யத்தின் மூலவர் அம்­பிகை எழுந்­த­ருளி அருள்­பா­லிப்­ப­தோடு சிவன் பார்­வ­தி­யுடன் ஏனைய பரி­வார தெய்­வங்­க­ளும்,  நவக்­கி­ர­கமும் பிர­திஷ்டை செய்­யப்­பட்­டுள்­ளது.

Tuesday, April 22, 2014

பல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் (Nalanda Gedige) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையின் மையப்பகுதியென  ( 7.6699136N, 80.6458444E ) உறுதிப்படுத்திய இடம் இதுவாகும். A9 பிரதான வீதியில், தம்புள்ளைக்கு தெற்குப் பக்கமாக 20 கி.மீ தூரத்தில், பிரதான பதையில் இருந்து கிழக்கே 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நாலந்த கெடிகே என்னும் சிலை மண்டபம்.

Friday, April 11, 2014

தூக்கமின்மை (Insomnia) பாரிசவாத (Stroke) ஆபத்தை அதிகரிக்கும் - ஆய்வில் தகவல்

தூக்கமின்மை Insomnia

நமது உடலுக்குத் தேவையான அளவு தூங்கமுடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி தூக்கமின்மை (Insomnia) ஆகும். நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை இடையூறு இல்லாமல் நீட்டிப்பதிலும் குழப்பங்கள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று வரையறுக்கின்றனர்.

Thursday, April 03, 2014

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்

ஈமத்தாழி

திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கிணறு வெட்டும்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாழி இதுவாகும். நீண்ட தேடல்களுக்குப் பின்னால் இப்படங்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. இத்தாழியுடன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும் படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

திருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1

திருகோணமலை வரலாறு

வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும்.

Tuesday, April 01, 2014

தம்பலகாமம் பிரதேசச் செயலாளர் கௌரவிப்பு - புகைப்படங்கள்

jeya-shripathy

இடம். தி/சாரதா வித்தியாலயம்.
பட்டிமேடு
தம்பலகாமம்.
காலம். 25.03.2014. செவ்வாய்க்கிழமை
நேரம். பிற்பகல் 2.00.