Wednesday, March 24, 2010

World TB Day / சர்வதேச காசநோய் தினம்



காச நோய் மைக்கோ பக்ரீரியம் என்னும் நுண்ணங்கியால் ஏற்படும் ஓர் தொற்றுநோய். சர்வதேச காசநோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24ம் திகதி காசநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் வாழும் இக்கிருமி பற்றிய சில விளக்கங்களை கீழுள்ள பதிவுகளில் காணலாம்.
  • இந்நோய்பற்றி அறிந்துள்ள அனைவரும் மற்றவர்களுக்கு இந்நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அது தொற்றும் அபாயத்தில் நாமும் இருக்கிறோம்.
செய்தி - முறையான மருத்துவம் மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய நோய் காச நோய் - TUBERCULOSIS.

ஒன்றிணைவோம்
முயல்வோம்
சாதிப்போம்
த.ஜீவராஜ்

Tuesday, March 16, 2010

ஒரு நரபலியின் துயரக்கதை



திருகோணமலையில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் கந்தளாயில் உள்ள குளத்தினைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. பலமுறை பயணங்களின்போது பார்த்ததுதான் என்றாலும் அன்று விசேடமாக 'அம்மான் கண்' என்றழைக்கப்படும் குளக்கட்டின் ஒருபகுதியினைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

Friday, March 12, 2010

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.

Friday, March 05, 2010

வரலாற்றுத் திருகோணமலை


வரலாற்றுத் திருகோணமலை எனும் இந்நூல் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டது. பலசாசனங்களில் இருந்தும், வரலாற்று நூல்களில் இருந்தும் ஆதாரங்களைக்காட்டி எழுதப்பட்ட இந்நூல் திருகோணமலையின் வரலாற்றை போர்த்துக்கீசர் காலம்வரை ஆராய்கிறது.