Sunday, February 28, 2010

நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை


வெள்ளைக்காரன் விலகிப்போனால்
விடிவு வரும் என்று
கொள்ளை ஆசை கொண்டிருந்தோர்
குடும்ப வாழ்க்கை இன்று
எள்ளளவும் உயர்வு இன்றி
இரந்து உண்ணும் நிலையில்
உள்ளனரே அவர்கள் வாழ்வை
உயரச் செய்ய வேண்டும்.

இந்த நாட்டு மன்ன ரென்ற
ஏற்றம் நமக்கிருந்தும்
சொந்த வீடு காணி இன்றிச்
சோற்றுக் கலைகின்றோம்
மந்திரிமார் மாறி மாறி
வந்து அரசாண்டும்
இந்த ஏழ்மை நிலைமறைய
என்ன செய்தார் அண்ணே

Sunday, February 14, 2010

கோணேசர் கல்வெட்டு


'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.

Tuesday, February 02, 2010

சீதாஎலிய ஆலயம் - புகைப்படங்கள்

இலங்கையில் கடல் மட்டத்தில் இருந்து 1500 தொடக்கம் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ள மாவட்டம் நுவரெலியா. சிறிய இங்கிலாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட அழகிய நகரமான நுவரெலியாவில் இருந்து சுமார் 5km தூரத்தில் அமைந்திருக்கிறது சீதாஎலிய ஆலயம்.

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்டதாகக் காணப்படும் இந்த ஆலயம் சிறியதாக ,நேர்த்தியானதாக இருக்கிறது. உலகில் சீதைக்கென உள்ள தனியான ஆலயம் இதுவாகும். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலயமாதலால் பெரிதாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. எனினும் இங்குள்ள உழைக்கும் மக்களால் ஆலயத்தில் தைப்பொங்கல்விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்படுகிறது என அறியமுடிகிறது.