Tuesday, May 28, 2019

1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வு


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம்.