Saturday, November 02, 2019

1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்


தம்பலகாமம் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் திருக்கோணாசல வைபவம் எனும் நூலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. 1889 ஆம் ஆண்டளவில் திருகோணமலை திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருக்கோணாசல வைபவம் எனும் இந்நூல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இருந்து 1854ல் களவுபோன மரகத  இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம் பற்றிச் சொல்கிறது.

Thursday, October 17, 2019

ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Sunday, August 18, 2019

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.

Thursday, July 18, 2019

1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்


ஒல்லாந்து ஆளுனர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda ( தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுனரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு (நன்றி காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்) இவ்வாறு அமைகிறது.

Monday, July 15, 2019

தேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Sunday, June 16, 2019

19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்


பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 12, 2019

மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரிய வளமைப் பத்ததி


சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில்  இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.

Tuesday, May 28, 2019

1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வு


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம். 

Thursday, January 10, 2019

நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.