Tuesday, October 11, 2022

ஊர்ப்பெயர் திரிபு - தம்பலகாமம் முதல் Thambalagamuwa வரை

ஊர்ப் பெயர்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வருவதை இடப்பெயர் வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறு ஊர்ப் பெயர்களில் திரிபு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

Sunday, October 09, 2022

அணிந்துரை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வரலாற்று எழுத்தியலிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.  போரில் தொடர்புடைய சிற்றூர்கள், பாலங்கள், போர்க் கப்பல்கள்,  வழிபாட்டுத் தலங்கள் என இதுவரை அதிகம் பேசப்படாமல் இருந்த பல விடயங்கள்  வரலாற்று  ஆய்வாளர்களின் கவனத்தை திருப்பின.  வரலாற்றுத்துறைசாரா ஆர்வலர்களினால்  அவர்களைச் சுற்றியுள்ள இடங்கள் மிக அக்கறையோடு கவனிக்கப்பட்டது. இதுவரை பெரு வரலாறு பெற்றிருந்த முக்கியத்துவத்தை நுண் வரலாறு  பெறத் தொடங்கியது. நமது பாரம்பரிய வரலாற்றுக் கல்வியானது தேசம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் ஆட்சியாளர்களது வாழ்க்கையை கால ஒழுங்கு நிரலில் எழுதி வரலாறாகப் போதித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு தேசத்தின் புற உருவப் படத்திற்கு நிகரானதே தவிர உள்ளடக்க விளக்கங்கள் நிறைந்தவை அல்ல. 

நூன்முகம் - பேராசிரியர் சி. பத்மநாதன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


நூன்முகம்

வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன்

வேந்தர்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஜீவராஜ் பல ஆண்டுகளாக எமக்கு அறிமுகமானவர். பல்கலைக் கழகத்து மருத்துவக் கல்லூரியில் மேனாட்டு மருத்துவக் கலை பயின்று, பட்டதாரியானபின் பலவருடங்களாகத் திருகோணமலையில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் தொழில் புரிந்து வருகிறார். 

Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.