Tuesday, March 14, 2023

1865 - 1895/6 தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் - pdf ஓலைச்சுவடிகள்


கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல்  ஆசிரியரான திரு.தி. த. சரவணமுத்துப்பிள்ளை  (1865 - 1895/6) இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.

Tuesday, March 07, 2023

1846 இல் சிவன் கோயில் சொத்துக்கள் பற்றிய விபரம் - pdf ஓலைச்சுவடிகள்


திருகோணமலை நகரப் பகுதியில் புகழ்பெற்ற விசுவநாத சுவாமி சிவன் கோயில் தொடர்புடைய வளமைப் பத்ததி எனும் ஓலைச்சுவடி அண்மையில் வாசிக்க கிடைத்தது. இது வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் திரட்டிலிருந்து திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன்  அவர்களுக்கு ஊடாக எமது பார்வைக்கு கிடைத்திருந்தது.

Thursday, March 02, 2023

ஓலைச்சுவடிகள் pdf - திருக்கோண நாதர் மும்மணிமாலை

 

திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த  வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள்  நூலகத்திட்ட   உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.