Tuesday, February 28, 2023

அறிவாட்டி (ஆதினி பகுதி 6)


வீட்டு வாசலின் களிமண் சுவரில் தலை சாய்த்தபடி கோமதி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்தபோதே ஆதினிக்கு புரிந்து விட்டிருந்தது.  தனது தந்தை காடு செல்ல முடிவெடுத்துவிட்டார். இனி அவரைத் தடுக்க முடியாது. இருந்தாலும் உள்மனதில் ஏதோவொன்று வழமைக்கு மாறாக  உறுத்திக் கொண்டிருந்தது. அன்றுதான் அதிசயமாக அந்தக்காட்சியை ஆதினி பார்க்கிறாள். நீண்ட காலத்திற்குப் பிறகு மதியநேரம் ஒன்றில் அவளது அப்பா வீட்டில் இருப்பதையும், குழந்தைகள் அனைவரும் அவர் மடியிலும், தோளிலுமாக துள்ளி விளையாடுவதையும் காண மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்துப்போனது. ஆனால் இந்த சந்தோசம் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற பயம் அவள் மனதை ஆட்டிப்படைத்தது. கேசவனின் கழுத்தினை கைகள் இரண்டாலும் இறுக்கி கட்டிக்கொண்டு ஆதினி அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள். 

Friday, February 24, 2023

கோணேசர் கல்வெட்டு


கோணேசர் கல்வெட்டு என்கின்ற வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிராஜவரோதயன் அவர்களால் 17ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும், உரைநடைப் பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.

Thursday, February 23, 2023

ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம்


எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது. 

Tuesday, February 07, 2023

தமனதோட்ட TAMANATOTA


இணையத்தில் இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற ஆய்வுத் தொகுப்பினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

Monday, February 06, 2023

தம்பை நகர்


தம்பலகாமத்தினை தம்பை நகர், தம்பை ஊர் எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை நிலைபெற்று இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. தம்பை என்ற சொல் இடப்பெயராக நீண்ட காலமாக இலங்கையிலும்;, தமிழ்நாட்டிலும் வழங்கி வந்திருக்கிறது.

Wednesday, February 01, 2023

பெரிய வதனமார் (ஆதினி பகுதி 5)


எல்லைக்கல் நாட்டப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. காலை வேளையில் ஊரின் நடுப்பகுதியிலிருந்து கேட்ட பறையொலி அனைவரையும் ஒன்று கூடச்செய்தது. ஆதினியும், சகோதரர்களும் தந்தையோடு ஒட்டிக்கொண்டு கூட்டத்தில் கலந்து நின்றார்கள். பறையறிவிப்பவன் கூட்டம் கணிசமாக சேர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டு ஓலைச்சுவடியில் இருந்ததை உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான். நாட்டில் நிலவும் வரட்சியைப்போக்க மழைவேண்டி வழிபடும் கந்தளாய்க் குளத்து மகாவேள்வியை பங்குனி மாதத்தில் நடத்த திருக்கோணேச்சர தொழும்பாளர்களும், கந்தளாய் பெருங்குறிப் பெருமக்களும் தீர்மானித்திருப்பதால் அதற்குரிய அனைத்து ஆயத்தங்களையும்  மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பு சொல்லியது.