Tuesday, June 17, 2014

வரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்

வரலாற்றில் திருகோணமலை

பண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.

Wednesday, June 11, 2014

தம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு

Thampalakamam


ஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.

Tuesday, June 10, 2014

கம்பன் கழகத்தின் ‘ஏற்றமிகு இளைஞன்’ விருதுபெற்ற அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா

jathindra

ஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க  இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.

1970 களில் 'திருக்கோணேஸ்வர ஆலய நகர் வலம்' - (கணேசன் சந்தி) - புகைப்படங்கள்

Koneswaram1970

1970  ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையில் 'திருக்கோணேஸ்வர  ஆலய நகர் வலம்'  இடம்பெறுகையில் திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கணேசன் சந்தியில் அமைக்கப்படும் அலங்கார வளைவுகளின் பதிவுகள் சில.

Tuesday, June 03, 2014

தெய்வத்தை வேண்டுகின்றேன்

பெரியோர்கள் செய்கை

பாசத்தில் பிணைப்புண்டிந்த
பாரினில் பிறந்து விட்டேன்
யோசனை பல வாறாக
நொடிக் கொரு ஆவல் தோன்றும்.
ஆசையை அறுத் தெறிந்தால்
அமைதியை அடையலாம் தான்
லேசில்லை அதனைச் செய்தல்
நிம்மதி இழந்தேன் அந்தோ!.