Thursday, March 28, 2013

வீரசிங்கம் விதானையார்

அட்வகேற்


‘அட்வகேற்’ ஆனந்தன்  காலை ஆராதனைகளை முடித்துக்கொண்டு தன் அலுவலகத்திற்குள் நுளைந்து தன்னைச் சந்திக்க வந்திருக்கும் வாடிக்கையாளர்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்களது பிரச்சனைகளை அலசி ஆராயத் தொடங்கினார்.

Tuesday, March 26, 2013

தம்பலகாமம் தந்த தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி

பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி

தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ என்னுந்திடல் மிகப் பிரசித்தமானது. ‘கூட்டங் கூட்டமாய்ப் பசு வளர்த்த கூட்டாம்புளி’ எனக் கவிஞர் தம்பலகாமம் வேலாயுதம் அவர்கள் இத்திடலைச் சிறப்பித்துப் பாடியுள்ளமையை இங்கே குறிப்பிடலாம்.

கேரளத்துப் பல்கவைக்கழகப் பேராசிரியராகிய அமரர் திரு.எஸ்.சத்தியமூர்த்தி அவர்களும் , திருகோணமலையின் முதல் வயலின் இசைக் கலைஞர் சங்கீதபூசணம் அமரர் திரு வல்லிபுரம் சோமசுந்தரம் அவர்களும் , சங்கீத இசை ஆர்வலர் அமரர் திரு.மாரிமுத்து அவர்களும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களாகும்.

Thursday, March 07, 2013

சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.2

குரு

சத்தியகாமனின் ஞானோதயம். பகுதி.1

சீடனாய்ச் சேர்ந்த காமனுக்குச்
சிறப்புடன் ‘உபநயனம்’ செய்து வைத்து
வித்தைகளைப் பயில்வதற்கு தகுதியான
‘பிரமச் சரியம்’நோற்கின்ற பிராமணனாய்
பெருமை பெறும் சான்றோனாய் ஆக்கிப்
‘பிரம்ம’ உபதேசத்திற்குத் தொடக்கமான
‘பூணூல்’ கல்யாணத்தையும்
பொறுப்பாகச் செய்து வைத்தார்.

Tuesday, March 05, 2013

திருகோணமலையின் வரலாற்று நாயகன் மதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்கள்

நா.தம்பிராசா

திருகோணமலையின் வரலாறு அடங்கிய கல்வெட்டுக்களைத் தேடியலைந்து அவற்றைப்பற்றிய தகவல்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அக்கல்வெட்டுக்களிலுள்ள விபரங்களை மற்றவர்களும் அறியும் வண்ணம் பிரபலப்படுத்த பேருதவியாக இருந்தவர் திருகோணமலையின் வரலாற்று நாயகனாகிய எமது பெருமதிப்பிற்குரிய திரு.நா.தம்பிராசா அவர்களேயாகும்.