Sunday, June 16, 2019

19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்


பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 12, 2019

மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரிய வளமைப் பத்ததி


சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில்  இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.