Thursday, November 20, 2014

கேணிப்பித்தன், சம்பூர் ஸதீஸ் கௌரவிப்பு - புகைப்படங்கள்


2014 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த நூல்களை எழுதிய ஆசிரியருக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெற்றது. அதில்

திருகோணமலை மாவட்ட கிராமிய பாடல்கள் - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்
சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார்

விருது பெற்ற இரு நண்பர்களுக்கும் ஜீவநதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

Wednesday, November 19, 2014

இது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்

இது குளக்கோட்டன் சமூகம்

“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர் கலாநிதி  சரவணபவன் அவர்கள்.  திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய ‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.

சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.