Showing posts with label நீங்களும் உதவலாம். Show all posts
Showing posts with label நீங்களும் உதவலாம். Show all posts

Thursday, January 10, 2019

நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Monday, December 31, 2018

மொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்



திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

Saturday, October 27, 2018

இலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்


உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.

Thursday, July 12, 2018

அடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக  ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.


Saturday, April 14, 2018

ஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.

Wednesday, February 28, 2018

சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம்,  நல்லூர்,  வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.

Sunday, December 10, 2017

பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட 143 சிறுவர்களுக்கான மூன்றாம் கட்ட ஊட்டச்சத்து  உணவு  வழங்கி  வைக்கும்  நிகழ்வு 07.12.2017  அன்று பாட்டாளிபுரத்தில் இடம்பெற்றது.

Tuesday, December 05, 2017

G.C.E. (O/L) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மாணவர்களின் பாட அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்படும் இக்கருத்தரங்குகள் பாடத்தில் தேர்ச்சி பெற்ற திருகோணமலை வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 01, 2017

இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் சம்பூர் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் 25.10.2017 அன்று வழங்கிவைக்கப்பட்டது. 

Friday, October 27, 2017

முடிந்தால் உதவலாம் - (கேட்போர்கூடத்திற்கான இருக்கைகள்) - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமூகத்தின் பல தொல்மரபுகள் அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். இதுவரை அறியப்பட்ட இக்கிராமத்தின் கல்விப்பாரம்பரியம் தம்பலகாமம் ஸ்ரீ வீரக்கோன் முதலியார் அவர்களில் இருந்து தொடங்குகிறது. 17ஆம் நூற்றாண்டளவில் அவரால் எழுதப்பட்ட ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் நூல் ஈழத்திலக்கிய வரலாற்றில் தனித்துவம் கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 26, 2017

விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


விசேட தேவையுள்ள குழந்தைகளின் கற்றல் ,சமூக, பொருளாதார விடையங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு திருகோணமலையில் செயற்பட்டுவரும் நிறுவனம்  HOPE நிறுவனமாகும்.

Friday, April 07, 2017

கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்


1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.

Wednesday, February 15, 2017

அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்


தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள்  அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.

Tuesday, January 19, 2016

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு தைப்பொங்கல் தினமான 15.01.2016 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பலகாமத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

Saturday, November 14, 2015

இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்


உலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும் தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

Wednesday, October 21, 2015

கப்பல்துறையில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கும் இளைஞர் கழகத்திற்கு 16.10.2015 அன்று விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு செய்யப்பட்டது. பிரித்தானியாவில் வசிக்கும்  திரு. ஏரன் அரசசிங்கம் (MR. AARAN ARASASINGAM) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினர் வழங்கி வைத்தனர்.

Wednesday, August 05, 2015

தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


நாடளாவியரீதியில் நடத்தப்படும் பரீட்சைகள் நெருங்கி வரும் போது நகர்ப்புறங்களில் கருத்தரங்குகள் பல இடம்பெறுவது வழமை. இந்த வாய்ப்புகள் கிராப்புறங்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. எனவே இம்முறை 2015 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தம்பலகாமத்தில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கினை  செய்வதற்கான முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Thursday, May 28, 2015

அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


தம்பலகாமம் சிவசக்திபுரம் அறநெறிப்பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் சிவசக்திபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் திரு.வே.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வறநெறிப் பாடசாலையில் 35 மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இரண்டு ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 19, 2014

சிவநய அறநெறிப்பாடசாலை நூலக அங்குராட்பணம் - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.