அமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின்  எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
கருவறை - வெருகல் சித்திரவேலாயுத சுவாமி கோயிலின் கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சித்திர வேலாயுதப் பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
தீர்த்தம் - வெருகல் கங்கை 
வருடாந்த மகோற்சவம் - இங்கு வருடாந்த மகோற்சவத்தை ( 16/09/12  - 03/10/2012 )  முன்னிட்டு கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் நடைபெறும். பத்தொன்பதாம்  நாள் காலையில்  தீர்த்த உற்சவம் ( 04/10/2012 )  இடம்பெறும்.
வருடார்ந்த உற்சவத்தை முன்னிட்டு திருகோணமலை ,மூதூர், மட்டக்களப்பு ஆகிய இடங்ளிலிருந்து நடைபஜனைகள் இடம்பெறுவது சிறப்பான நிகழ்வாகும்.
வெருகலம்பதியில் நடைபெறும் மகோற்சவகால விழாக்களின் விபரம் 
விழா                                                 விழாவுக்கு உரித்தான கிராமம்/நகரம் 
1.ம் திருவிழா                                  வல்வெட்டி 
2.ம் திருவிழா                                  பட்டித்திடல்
3.ம் திருவிழா                                  சம்பூர் 
4.ம் திருவிழா                                  மணற்சேனை /பெரியவெளி 
5.ம் திருவிழா                                  பள்ளிக்குடியிருப்பு 
6.ம் திருவிழா                                  பாலத்தடிச்சேனை
7.ம் திருவிழா                                  கூனித்தீவு
8.ம் திருவிழா                                  மூதூர் நகரம் (கல்விப்பகுதி) 
9.ம் திருவிழா                                  வெருகல்/முகத்துவாரம் 
10.ம் திருவிழா                                கிளிவெட்டி 
11.ம் திருவிழா                                மேன்கமம் /கங்குவேலி 
12.ம் திருவிழா                                மல்லிகைத்தீவு
13.ம் திருவிழா                                ஈச்சிலம்பற்று/ ஆநெய்த்தீவு/ முத்துச்சேனை
14.ம் திருவிழா                                கதிரவெளி 
15.ம் திருவிழா                               சேனையூர் /கட்டைபறிச்சான்
16.ம் திருவிழா                               மாம்பழத்திருவிழா பூநகர் பூமரத்தடிச்சேனை 
17.ம் திருவிழா                               வாழைச்சேனை
18.ம் திருவிழா                               செங்கலடி செட்டிகுடி 
19.ம் திருவிழா                                பூங்காவனத்திருவிழா  
கருவறை 
த.ஜீவராஜ்
வெருகல் முருகனை கேள்விப்பட்டதே அன்றிப் படத்திலும் தரிசிக்க இதுவரை கிட்டவில்லை.
ReplyDeleteஆனால் அழகிய கோபுரத்துடன் தரிசனம். இக்கோபுரம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் கோபுரத்தை நினைவூட்டுகிறது.
கிழக்கில் அழகிய பழமைமிக்க கோபுரங்களுடன் கோவில்கள் அப்படியே பாதுகாக்கப்படுவது இதமாக உள்ளது.
மூலவர், உற்சவ மூர்த்திகள் அழகும்,அருளும் மிக்கதாக ஜொலிக்கின்றனர்.
நன்றி
மிக்க நன்றி
Deleteபடங்கள் மூலம் சிறப்புகளை அறிய முடிகிறது.... நன்றி...
ReplyDelete