Wednesday, November 08, 2017

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - புகைப்படங்கள்


மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 25.10.2017 அன்று கப்பல்துறை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.  திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்  தொற்றாநோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி Dr. சிந்தியா அவர்கள் இக்கருத்தரங்கில்  வளவாளராக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 07, 2017

‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005

தம்பலகாமம் கல்வெட்டு

பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில்  ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.

Wednesday, November 01, 2017

இளக்கந்தையில் புத்தகப்பைகள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் சம்பூர் இளக்கந்தை அ.த.க வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் 25.10.2017 அன்று வழங்கிவைக்கப்பட்டது.