Tuesday, March 14, 2023
1865 - 1895/6 தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் - pdf ஓலைச்சுவடிகள்
Tuesday, March 07, 2023
1846 இல் சிவன் கோயில் சொத்துக்கள் பற்றிய விபரம் - pdf ஓலைச்சுவடிகள்
திருகோணமலை நகரப் பகுதியில் புகழ்பெற்ற விசுவநாத சுவாமி சிவன் கோயில் தொடர்புடைய வளமைப் பத்ததி எனும் ஓலைச்சுவடி அண்மையில் வாசிக்க கிடைத்தது. இது வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் திரட்டிலிருந்து திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களுக்கு ஊடாக எமது பார்வைக்கு கிடைத்திருந்தது.
Thursday, March 02, 2023
ஓலைச்சுவடிகள் pdf - திருக்கோண நாதர் மும்மணிமாலை
திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது.
Tuesday, February 28, 2023
அறிவாட்டி (ஆதினி பகுதி 6)
வீட்டு வாசலின் களிமண் சுவரில் தலை சாய்த்தபடி கோமதி அமர்ந்திருந்த நிலையைப் பார்த்தபோதே ஆதினிக்கு புரிந்து விட்டிருந்தது. தனது தந்தை காடு செல்ல முடிவெடுத்துவிட்டார். இனி அவரைத் தடுக்க முடியாது. இருந்தாலும் உள்மனதில் ஏதோவொன்று வழமைக்கு மாறாக உறுத்திக் கொண்டிருந்தது. அன்றுதான் அதிசயமாக அந்தக்காட்சியை ஆதினி பார்க்கிறாள். நீண்ட காலத்திற்குப் பிறகு மதியநேரம் ஒன்றில் அவளது அப்பா வீட்டில் இருப்பதையும், குழந்தைகள் அனைவரும் அவர் மடியிலும், தோளிலுமாக துள்ளி விளையாடுவதையும் காண மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்துப்போனது. ஆனால் இந்த சந்தோசம் தொடர்ச்சியாக இருக்க வேண்டுமே என்ற பயம் அவள் மனதை ஆட்டிப்படைத்தது. கேசவனின் கழுத்தினை கைகள் இரண்டாலும் இறுக்கி கட்டிக்கொண்டு ஆதினி அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
Friday, February 24, 2023
கோணேசர் கல்வெட்டு
Thursday, February 23, 2023
ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம்
எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது.
Tuesday, February 07, 2023
தமனதோட்ட TAMANATOTA
இணையத்தில் இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற ஆய்வுத் தொகுப்பினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.
Monday, February 06, 2023
தம்பை நகர்
தம்பலகாமத்தினை தம்பை நகர், தம்பை ஊர் எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை நிலைபெற்று இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. தம்பை என்ற சொல் இடப்பெயராக நீண்ட காலமாக இலங்கையிலும்;, தமிழ்நாட்டிலும் வழங்கி வந்திருக்கிறது.