Tuesday, October 31, 2023

1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல்.

 

இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு. 

நட்புடன் ஜீவன்.

Wednesday, October 25, 2023

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியின் புராதன இடங்கள் - புகைப்படங்கள்

வேலை நிமித்தம் கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் நடமாடிய பொழுது காணக் கிடைத்த மூன்று புராதன இடங்கள் இங்கே சுருக்கக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, October 20, 2023

திருக்கோணேச்சரம் - Thirukoneswaram temple

 


400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சரத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கும் முயற்சி.
An attempt to design the Thirukoneswaram temple in the 17th century (1600) with the help of artificial intelligence. நட்புடன் ஜீவன்.

Wednesday, October 11, 2023

இராஜராஜ சோழன் காலத்தில் திருக்கேதீச்சரத்தில் கட்டணப் பாதை

 

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழப் பெரு மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இலங்கையின் மன்னார் பிரதேசத்தில் இருக்கும் வரலாற்றுப் புகழ் பெற்ற துறைமுகமான மாதோட்ட நன்னகரில் இருந்த கட்டணம் செலுத்தி பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட பாதை பற்றிய பதிவு.

Friday, September 15, 2023

நூறாண்டுகளுக்கு முன்னர் (1919) வாழ்ந்தவர்களின் பெயர்கள்

A postcard image of a Sri Lankan Tamil woman, 1910.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

தமிழில் பெரிதும் பிரபல்யம் இல்லாத ஒரு துறை பெயராய்வு (onomatology). ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்வரும் ஆவணத்தில் உள்ள நபர்களின் பெயர்களை மக்கட் பெயராய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, September 13, 2023

கந்தளாய்க் குளக்கட்டுக் காவியம்


மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால்  இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங்காலமாக நடைபெற்று வருகின்றன. அவை

1. ஆகம வழிபாடு  (பெரும்தெய்வ வழிபாடு) - கோயிலில் நடைபெறும் நித்திய பூசை, அபிஷேகம், திருவிழா போன்றவை

2.  கிராமிய வழிபாடு (சிறுதெய்வ வழிபாடு) - கந்தளாய்க் குள மகா வேள்வி, தம்பலகாமம் நாயன்மார் திடலில் நடைபெறும் மடை வைபவம் ,கள்ளிமேடு ஆலையடியில் நடைபெறும் பத்தினித் தேவி விழா , சிப்பித்திடலில் நடைபெறும் அண்ணமார் வேள்வி, வல்லிக்கண்ணருக்கு மடை, மாகாமத்தில் இடம்பெறும் மூர்க்காம்பிகா விழா போன்ற வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திறந்த வெளிச் சுற்று ஆராதனைகள்.

Thursday, August 17, 2023

வருடங்கள் 15


இணையவெளியில் ஜீவநதி வலைமனையில் குடிபுகுந்து (13.08.2008) 15 வருடங்கள் ஆகிறது. வாசகர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பினாலும், உற்சாகமூட்டலாலும் என் எழுத்துக்கள் வருடம் தோறும் மெருகேறி வருவதை வரலாறாகக் காட்டுகிறது இந்த வலைமனை. உங்கள் அனைவரின் அன்புக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

Wednesday, August 02, 2023

மரக் குதிரை - (ஆதினி பகுதி 10)


காதைக் கூர்மையாக்கிக் கொண்ட குருவும், சிஷ்யையும் பறையொலி நெருங்கி வருவதைப் புரிந்து கொண்டனர். கந்தளாய்க் குள வேள்விக்காக மாடு பிடிக்கச் சென்ற மறிகாரர்கள்தான் ஊர் திரும்பி வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக அந்தப் பறையொலி இருந்தது. தனது தந்தை கேசவன் வீடு திரும்பி வருகிறான் என்ற ஆனந்தம் ஆதினியின் முகம் முழுக்க மகிழ்ச்சி ரேகைகளைப் படரச் செய்தது. அதற்கு மாறாக அறிவாட்டியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படரத் தொடங்கின.