Thursday, May 28, 2015

1900 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் - புகைப்படங்கள்


இலங்கையில் உள்ள பெரிய  கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத் தளம் (Sri Lanka Navy (SLN) Dockyard) பிரித்தானிய ஆட்சியின் கீழ்   Royal Naval Dockyard ஆக இருந்த 1900 ஆம் ஆண்டு புகைப்படங்கள்.

அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


தம்பலகாமம் சிவசக்திபுரம் அறநெறிப்பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் சிவசக்திபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் திரு.வே.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வறநெறிப் பாடசாலையில் 35 மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இரண்டு ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 13, 2015

மாயனின் ‘அவனும் அதுவும்’ (சிறுகதைத் தொகுப்பு)


ஈழத்து இலக்கிய உலகில் தடம்பதிக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ‘மாயன்’ என்னும் புனைப்பெயருக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் திரு.இரா.ஸ்ரீஞானேஸ்வரன் காணப்படுகிறார். இலக்கியத்துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற இவர் பத்திரிகைத்துறையில் தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 06, 2015

கந்தளாய்ப் பூதங்களின் கதை


08.06.1786 இல் தம்பலகாமத்தில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணமான ஒல்லாந்த ஆளுனர் அக்காலத்தில் தம்பலகாம மக்களிடையே பூதங்கள் தொடர்பாக இருந்த அச்ச உணர்வு பற்றி விபரித்திருக்கிறார். இந்தப் பூதங்களின் கதை சுவாரிசமானது. என்னறிவுக்கு எட்டியவரை இந்தப் பூதங்கள் தொடர்பான நம்பிக்கைகள் 1985 காலப்பகுதிவரை தம்பலகாம மக்களிடையே பரவலாக இருந்தது. பின்வந்த நாட்களில் புதிதாக உருவான இனவன்முறைப் பூதம் இந்தப் கந்தளாய்ப் பூதங்களின் கதைக்களை வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவைத்துவிட்டது.

Tuesday, May 05, 2015

ஊடகம் பற்றி தமிழில் - Tamil Journalism


ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்காகச் செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும்.