Tuesday, February 10, 2015

‘செவ்வானம்’ - தீந்தமிழ்க் கவிஞன் திரு.பூ.பிரதீபன்


வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தைப் தாயகமாகக் கொண்டவர் நமது பல்துறைக் கலைஞர் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் அவர்கள். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார், காரியப்பர் ஆகிய இருவழித் தொழும்புகளுக்கு உரிமையுள்ளவராகிய செல்வராசா பூபாலசிங்கம் அவரது துணைவியார் கோடீஸ்வரி அம்மையார் ஆகியோர்களின் மூத்த புதல்வனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை தி/புனிதசவேரியர் மகாவித்தியாலயம், தம்பலகாமம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்ற இவர் உயர் கல்வியை திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் பெற்றார்.