Monday, October 29, 2012

வானிலை எச்சரிக்கை - 29.10.2012


வானிலை எச்சரிக்கை 29.10.2012
வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை மையம் வழங்கியது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. முல்லைத்வில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றின் வேகம் இன்னும் அதிகரிக்கலாம் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலும் இதேபோன்ற காலநிலை நிலவும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


WEATHER FORECAST FOR 30th OCTOBER 2012
(Issued at 12.00 noon. on 29th October 2012)
The deep depression in the Bay of Bengal  is centered about 200 km east of Mullattivu coast in the morning today. It is likely to move Westward causing heavy showers and strong winds over most parts of the country and surrounding sea areas. It is expected to intensify further in to a marginal cyclone ( not severe ) and move over northern part of Sri Lanka tonight.
 Shallow and deep sea areas off the coast extending from  to Batticaloa via Jaffna and Trincomalee, will experience very rough conditions, strong winds and intermittent rain. 


Wednesday, October 24, 2012

வாணி விழா - புகைப்படங்கள் - திருகோணமலை சிவானந்த தபோவனம்

வாணி விழா - புகைப்படங்கள் -  திருகோணமலை சிவானந்த தபோவனம்

திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தில் 24.10.2012 மாலை இல்லச் சிறுவர்களால் இயல், இசை , நாடகத்துடன் நடாத்தப்பட்ட வாணி விழா  தொடர்பான புகைப்படங்கள்.

நகை சுமந்த நங்கையர்


“கோகிலா வருகிறாயா திருவிழாவுக்குப் போகலாம்” என்று பக்கத்துக் குடிசைக்காரி கனகம்மா கேட்டாள்.

“போகலாம் தான் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி கூட இல்லாமல் எப்படியக்கா அவ்வளவு சனக்கூட்டத்திற்குள் போவது?”என்று கேட்டாள் கோகிலா.

Saturday, October 20, 2012

சிவப்புக் கோடுகள்

பாடசாலை

சுஜாத்தா தன் கையில் கட்டியிருந்த சிற்றிசனில் நேரத்தைச் சரிபார்த்துக் கொண்டே வீதியில் பார்வையைத் தெளித்தாள். தூரத்திலே அவள் பிரயாணம் செய்ய வேண்டிய ‘கிண்ணியா’ பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த ‘டிமோ’ பஸ்ஸில் முண்டியடித்து ஏறி ஒரு ‘சீற்றை’ பிடித்தவாறே‘சைனாபேக்கு’( China Bay ) ஒரு ‘டிக்கட்’ வாங்கிக் கொண்டு அப்பாடா எனப் பெருமூச்சு விட்டாள்.

Tuesday, October 16, 2012

மேகலாவின் காதலன்

thampalakamam

தம்பலகாமம் கோயில்குடியிருப்பில் கதிர்காமத்தம்பிப் போடியாரின் வளவில் ‘நெல்லுப்பட்டறை’ பிரித்து விவசாயிகள் விதைநெல் வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். போடியாரின் வளவு மாட்டு வண்டிகளும் மனிதர்களும் நிறைந்து காணப்பட்டது. சுப்பிரமணியம் என்ற நெற் செய்கையாளரும் போடியாரிடம்தான் வழக்கமாக விதைநெல் எடுப்பவர் ஆயினும் இம்முறை அவர் விதைநெல் வாங்க வரவில்லை. ‘என்ன காரணம். இம்முறை மணியம் விதைநெல் வைத்திருக்கிறானோ?’ என்று போடியார் எண்ணினார்.

Monday, October 15, 2012

அவர் திருந்தினார்

thampalakamam

மணி பிற்பகல் இரண்டு.
அந்தப் பையன் எதிர்பார்த்திருந்தபடியே பாடசாலை முடிவதைக்குறிக்கும் மணி அடித்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் பள்ளிக்கூடம் விட்டது. காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் இரண்டுமணிவரை அந்தப்பாடசாலைக் கட்டிடத்திற்குள் அடைபட்டுக் கிடந்த தங்களிடம் ‘கணக்கென்றும்’ என்றும் ‘வாசிப்பு’ என்றும் ‘சுற்றாடல்’ என்றும் ஆசிரியர்கள் இடையிடையே வந்து அதிகாரத்தோரணையில் கஸ்டம் கொடுத்ததெல்லாம் நின்று இப்போது வீட்டுக்குப் போகிறோம் என்ற ஆனந்த உணர்வுடன் மாணவர்களும் மாணவிகளும் வீடுகளை நோக்கி வீதியில் துள்ளிக் குதித்துச் சென்று கொண்டிருந்தனர்.

Thursday, October 11, 2012

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம் - புகைப்படங்கள்

உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம்

திருகோணமலைப் பட்டணத்திலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்தில் நிலாவெளிக்குச் செல்லும் பாதையில் உப்புவெளிக் கிராம எல்லையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயம் அமைந்துள்ள இடம் ‘சோலையடி’ என அழைக்கப்படுவதால் இவ்வாலயம் சோலை வைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.

மங்கை உமையாள் ஒருபாக வடிவம் கொண்ட பேரிறைவா!

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்

சிற்றம்பலத்தில் நடம் புரியும்
சிவனே! உன்றன் திருத்தாள்கள்
பற்றித் தொழுதேன் பயம் நீக்கிப்
பாப இருளைப் போக்கி விடு
கற்றைக் குழலில் பிறை சூடிக்
கங்கை மானைத் தரித்தோனே!
முற்றும் துறந்த முனிவர்களும்
முழுதும் அறியார் உன் அருளை.

Monday, October 08, 2012

மலை முரசு - திருகோணமலை செய்திகளைத் தாங்கிய வார இதழ்

மலை முரசு

திருகோணமலை செய்திகளைத் தாங்கி வாரம்தோறும் பிரசுரமாகும் மலை முரசின் 10 வது  ( 30.09.2012)  இதழ் வாசிக்கக் கிடைத்தது.  மலைமுரசு  தொடர்பான சில தகவல்கள்.

Sunday, October 07, 2012

முல்லை அமுதனின் காற்றுவெளி இலக்கிய சஞ்சிகை

முல்லை அமுதன்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,  இலங்கை)  ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முல்லைஅமுதன் அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தவர்.

Friday, October 05, 2012

அவனும் அவளும்

அவனும் ,அவளும்

அவன் பெயர் அமுதன் நல்ல
அழகிய இளங் கலைஞன்
தமிழினில் இனிமை கொஞ்சும்
தரமிக்க கவிதை செய்வோன்!
தம்பை மா நகரம் தந்த
தனித்துவம் மிக்க நல்ல
குடும்பத்தின் இளையோனாக
குதூகலமாக வாழ்வோன்.

Tuesday, October 02, 2012

கவிதைக்கு கிடைத்த பரிசு

கவிதைக்கு கிடைத்த பரிசு

குமரிப்பெண்கள் வாலிபர்களை எதிரும் புதிருமாகச் சந்திக்க நேர்ந்தால் வெட்கமடைந்து தலைகுனிந்து கால் பெருவிரலால் பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதுதான் இயல்பு. ஆனால் பெரிய அளவில் வாய்ச்சவடால் அடிக்கும் வாலிபச் சிங்கங்கள் கூட அழகான பெண்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டால் கூனிக்குறுகி கோணங்கித்தனமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.