Tuesday, February 25, 2014

தம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்

திருமலை இ.மதன்

வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘கூட்டாம்புளி’ மிகவும் பிரபலியமான இடமாகும். ‘கூட்டங்கள் கூடியதால் கூட்டாம்புளி’ என்று இத்திடலை கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தகைய சிறந்த ‘கூட்டாம்புளியில்’ புகழ் பெற்ற நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் புதல்வி இந்திராணி அவர்களுக்கும் இந்திரசூரிய பிரேமச்சந்திரன் அவர்களுக்கும் மூத்த மகனாகப் பிறந்தவர்தான் நமது மதிப்பிற்குரிய ‘பாதை மாறிய பயணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் திரு.இ.மதன் அவர்கள்.

Monday, February 17, 2014

திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்


இதுவரை நாம் திருகோணமலையில் சோழர்கள் என்னும் தொடரில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் (இலங்கை) சோழவம்சத்து இளவரசர்கள் அரசப்பிரதிநிதிகளாக முடிசூடி ஆட்சி செய்தார்கள் என்பதனைப் பார்த்திருந்தோம்.

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா

1992ம் ஆண்டு அது.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.

Tuesday, February 11, 2014

விருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்

இயற்கை வளம் செறிந்த தம்பலகாமம் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘மாக்கைத்திடல்’ வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புடைய வாழ்விடமாகும். தம்பலகாமத்தின் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் ‘குடமுருட்டி ஆறு’இத்திடலுக்கு அருகாண்மையில் ஓடுகிறது. பழமையில் இத்திடலில் ‘திருமால் கை’ என்ற விஷ்ணு கோயில் இருந்ததாகவும் இதன்காரணமாக இத்திடல் ‘திருமால்கை’ என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திருமால்கை’யே மருவி ‘மாக்கைத்திடலானது’ எனவும் விசயமறிந்த பெரியோர் கூறுவர். இக்கோயிலின் அழிபாட்டிடங்கள் மண்ணில் புதையுண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1

திருக்கோணேஸ்வரம்

வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம் சார்ந்து இதுவரை வெளிவந்த வரலாறு உள்ளிட்ட ஆன்மிக, இலக்கியங்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும், கல்விக்கான மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்கும் வைபவமும். 09.02.2014.

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 2

திருக்கோணேஸ்வரம்

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் அவர்கள் ‘நூல் அறிமுகவுரையை” ஆற்றினார்.

Thursday, February 06, 2014

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்

Koneswaram

'திருக்கோணேஸ்வரம்' -  நூல்

1000 பக்கங்களை உடைய இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் எனப்பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.