Tuesday, March 31, 2015

சம்பூர் அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை


மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கும் இதன் பணிகள்.

Friday, March 27, 2015

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான விண்ணப்பங்கள்


இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015.03.27 ஆந் திகதியன்று 18 வயதிற்குக் குறையாததும் 30 வயதிற்குக் கூடாததுமான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Monday, March 23, 2015

கதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்


கதிர்காமம் தென்னிலங்கையில் ஊவா மாகாணத்தில் உள்ள  திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின்கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற புனித பாதயாத்திரை தலமாகும்.

Thursday, March 19, 2015

தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றம் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்ற ஒன்று கூடல் தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் திரு.மா.புவேந்திரராசா தலைமையில் 08.02.2015 ஆந் திகதி பிற்பகல் 02.30. மணியளவில் நடைபெற்றது.

தம்பலகாமம் பொது நூலக வாசகர் வட்டம் (20.03.2015 /9.30 AM) - புகைப்படங்கள்


புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்த காலத்தினை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தைச் சந்திக்கத் துணைகொள்ளலாம். எதிர்காலத்தைத் திட்டமிடலாம். நல்ல புத்தகங்கள் அதன் சாயங்களை நம்மில் பதியவிட்டுச் செல்லும் என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள்.

Wednesday, March 18, 2015

ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்படங்கள்


1980 ஆண்டு அமரர்  தம்பலகாமம். க.வேலாயுதம்  அவர்கள் ஆக்கிய  ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது. 

Wednesday, March 11, 2015

Koneswaram 2015 - Photo Galleries


இதைத் தொடர்ந்து சம்பந்தர் தான் பாடிய பதிகங்களின் எட்டாவது பாடல் இராவணன் பற்றிய குறிப்பினை கொண்டிருக்கும் வகையில் அமைத்திருக்கிறார். இராவணன் தமிழ்வீரன் என்பதும், அவன் சிறந்த சிவபத்தனாகத் திகழ்ந்தான் என்பதும் புராணக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். இப்புராணக் கதை மரபினை பதிகங்களில் பயன்படுத்தும் வழக்கினை ஆரம்பித்து வைத்தவர் சம்பந்தப் பெருமானாகும். இது பிற்காலத்தில் நாயன்மார்கள் தமது பாடல்களில் இவற்றை இணைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்
பகுதி - 2  வாசிக்க...   'கோணமாமலை அமர்ந்தாரே'  2015 - புகைப்படங்கள்

'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்


பெரும்பாலான தமிழ் நாட்டுத் தலங்களை தரிசித்த ஞானசம்பந்தர்  அவ்வாலயச் சூழலின் அழகினைப் பாடல்களிலமைத்து அவ்வாலயம் பற்றிய விம்பங்களைப் பாடுவோர் மனத்தில் பதித்திடும் வகையில் தனது பதிகங்களைப் பாடியுள்ளார். அதுபோலவே கோணேசர் பதிகத்திலும் அடுத்துவரும் வரிகள் திருக்கோணேசர் ஆலயச் சூழலின் இயற்கை அழகினை வர்ணிப்பதாக அமைத்திருக்கிறார் சம்பந்தர்.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்

Sunday, March 08, 2015

திருக்கோணேச்சரம் 2015 - புகைப்படங்கள்


வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் ) என்ற பதிவு 2013 இல் எழுதப்பட்டபோது  திரு.யோகன் பாரிஸ் (Johan-Paris) அவர்கள் திருகோணமலைத் திருப்பதிகம் தொடர்பில் விளக்கம் கேட்டிருந்தார்.