Friday, August 20, 2010

மழையில் கரையும் இதயம்

மழை பொழியும் நாளில் மனம்
மகிழ்ச்சி கொள்ளுது
மனதிலுள்ள கவலையெல்லாம்
மறைந்து போகுது

ஈரம் பட்ட மரங்களெல்லாம்
சிலிர்த்து நிக்குது
எழில் நிறைந்த பூக்களில் நம்
இதயம் தொலையுது

Thursday, August 12, 2010

கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்


கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.