Friday, August 20, 2010

மழையில் கரையும் இதயம்

மழை பொழியும் நாளில் மனம்
மகிழ்ச்சி கொள்ளுது
மனதிலுள்ள கவலையெல்லாம்
மறைந்து போகுது

ஈரம் பட்ட மரங்களெல்லாம்
சிலிர்த்து நிக்குது
எழில் நிறைந்த பூக்களில் நம்
இதயம் தொலையுது
கூடுதிரும்பும் பறவைக் கூட்டம்
கோலம் போடுது வானில்
சின்ன சின்ன மேகமெல்லாம்
சிதறி ஓடுது

இடியிடிக்கும் போது மனம்
பதறிப் போகுது
இடையில் வரும் மின்னலினால்
கண்ணும் கூசுது

குளிர் நிறைந்த காற்று வந்து
உடலை வருடுது
கொஞ்ச நேரம் நனைந்தாலே
உயிரும் கரையுது.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: