Monday, September 22, 2014

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) புகைப்படங்கள் - 2


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

தென்கயிலை வாசா (வரலாற்று நாட்டிய நாடகம்) - புகைப்படங்கள் - 1


இராஜரெட்ணம் நடனாலயம் மாணவிகள் வழங்கிய தென்கயிலை வாசா  என்னும்   திருக்கோணேஸ்வர வரலாற்று நாட்டிய நாடகம் புனித மரியாள் கல்லூரியில் (06.09.2014) அரங்கேற்றப்பட்டது.  கன்னியா லலிதாம்பிகை தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தாவினால் உருவாக்கி இசை அமைக்கப்பட்ட இந்நாட்டிய நாடகத்தை நாட்டிய கலைமணி, நாட்டிய வித்தகி திருமதி ரேணுகாதேவி செல்வபுத்திரன் நெறியாள்கை செய்தார். திருக்கோணேஸ்வரத்தின் தொன்மையையும் அதன் வளர்ச்சி போக்கையும் 125 நடனமாணவிகள் அழகாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

Thursday, September 18, 2014

கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்

கண்ணகி அம்மன் வழிபாடு

திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.

Tuesday, September 09, 2014

“நீங்களும் எழுதலாம்” பௌர்ணமி தின நிகழ்வுகள் - புகைப்படங்கள்


 “நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பௌர்ணமி தின நிகழ்வுகள் அச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. 08.09.2014 மாலை 4.30 மணியளவில் திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வினை எழுத்தாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Monday, September 08, 2014

அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு III - திறந்த போட்டிப் பரீட்சை

வேலைவாய்ப்பு

அரசாங்க முகாமை உதவியாளர் சேவையில் வகுப்பு  III இன் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை, பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2014 திசெம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 05, 2014

நரகாசுரன்

narakasuran

தீபாவளிப் பண்டிகை என்றதும் நம்மிடையே ஞாபகம் வருபவர்களில் நரகாசுரனும் ஒருவர். பாடசாலைக் காலங்களில் அசுர குணங்கொண்ட, பயங்கரமானவராக அறிமுகமான புராணக் கதாபாத்திரம் இவர். பின்னாட்களில் அசுரர் பற்றிய தேடல்கள் பயந்தருவதற்குப் பதிலாக புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் ஆரம்பப் புள்ளிகளாயின. அதன்படி சுரர் என்பவர்கள் பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் என்றும். அசுரர் என்போர் சுரராகிய தேவர்களுக்கு விரோதிகள் என்றும் அறியக்கிடைத்தது.

Monday, September 01, 2014

திருகோணமலையில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் உலக சாதனை முயற்சி

அனிஸ்டஸ் ஜெயராஜா

கின்னஸ் உலக சாதனை (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும்,  இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் உசாத்துணை புத்தகமாகும். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதான விடையமல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது.