Thursday, November 28, 2013

திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1

இராஜராஜ சோழனின் சிலை ( பிரகதீஸ்வரர் கோவில்)

முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று '' கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்...''  என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை  ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது.

Thursday, November 21, 2013

கர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை

நாகராஜா கணபதிப்பிள்ளை

மிக எளிமையான தோற்றம், அன்புகனிந்த வார்த்தைகள், ஆன்மீகச் சிந்தனையால் பண்பட்ட உள்ளம், கர்மயோகிகளின் சலியாத உழைப்பு என உயர்ந்த மதிப்பீட்டில் நம் மத்தியில் வாழ்ந்த நண்பர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் இன்றில்லை என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது. மனதைக் கனக்கச் செய்யும் அவரது பிரிவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் மிக விசாலமானது. அவருடைய தேவை என்றும் வேண்டும் என எண்ணிக்கொள்ளும் வகையில் அவருடைய நட்பு இருந்தது. 1970களின் பின்னர் திருகோணமலையை அடையாளப்படுத்திய மிக முக்கிய முகவரிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.

திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )

koneswaram

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்
கிழக்கே                    திருக்கோணேஸ்வரம்
வடமேற்கே            திருக்கேதீஸ்வரம்
வடக்கே                   நகுலேஸ்வரம்
மேற்கே                   முனீஸ்வரம்
தென்கிழக்கே        தொண்டீஸ்வரம்
என்பனவாகும்.

Tuesday, November 12, 2013

‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்

விஸ்வாமித்திரர்’

எண்ணூறு வருடகால வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ குளக்கோட்டு மாமன்னன் காலத்திலிருந்து பெரிதும் பேசப்பட்ட இடமாகும். குளக்கோட்டனால் சிறப்பாக உருவாக்கப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ‘நாயன்மார் வேள்வி வளாகம்’ இத்திடலில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இத்திடல் ‘நாயன்மார்திடல்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வேள்வி வளாகத்திற்கான காணியை தென்னமரவடியைச் சேர்ந்த திரு.நமச்சிவாயம் என்னும் பெரியார் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.

Friday, November 08, 2013

திருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை - புகைப்படங்கள்

திருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை

ஆலய நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் தங்களது அமைப்புகளுக்குச் சிலை செய்வது என்று முடிவெடுத்தவுடன் திருகோணமலையில் அவர்கள் நாடுமிடம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் திரு.பிரம்மஸ்ரீ மு.பத்மநாப சர்மா ஐயா அவர்களின் பொம்மைச்சாலையாகும். யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாக கொண்ட இவர் மிக நீண்டகாலமாக திருகோணமலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, November 04, 2013

சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகழ்கொண்ட ஊர்.  மூதூர் நகரிலிருந்து 5 KM தொலைவில் உள்ளது இப்பிரதேசம். சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர்பெற்றது என்றொரு கருத்துண்டு.

Friday, November 01, 2013

முள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்


வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு பல சிறப்பம்சங்களைக் கொண்ட திடலாகும். இங்கேதான் குளக்கோட்டனாலும், அவன் காலத்திற்குப் பின்னர் ‘கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனாலும்’ உருவாக்கப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியமான ‘கள்ளிமேட்டு ஆலையடி வேள்வி வளாகம்’அமைந்திருக்கிறது.

Thursday, October 31, 2013

மின்நூல் - ''ரங்கநாயகியின் காதலன்'' - குறுநாவல்


ஆக்க இலக்கியத் துறையில் புனைகதை வகை சாதாரண மக்களின் கவனத்தை ஈர்த்துவிடக்கூடிய ஒரு இலக்கிய வடிவமாகும். அந்த வகையில் காலத்தின் பதிவாகவும், ஒரு குறித்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பாரம்பரியம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் மற்றும் சமூக அசைவியக்கம் என்பவற்றை மிக எளிய நடையில் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியவகையில் எடுத்துக்கூறும் புனைகதை வடிவமான குறுநாவலினூடாக மிக எளிமையான முறையில் அக்கால இலக்கிய பேச்சு வழக்கு நடையில் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ரங்கநாயகியின் காதலன் ஊடாக வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
வல்வை.ந.அனந்தராஜ் , திருக்கோணமலை.

Wednesday, October 30, 2013

மின்நூல் - ''தமிழ் கேட்க ஆசை'' - கட்டுரைத் தொகுப்பு


திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவரது கட்டுரைகளில் பல  இவரது மண்ணின் , தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.
கலாவினோதன்,த.சித்தி அமரசிங்கம்.

Monday, October 28, 2013

ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமாகிய அமரர் திரு.முத்துக்குமாரு சிவபாலபிள்ளை


வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் ‘வர்ணமேடு’ பழமையில் இருந்தே நன்கு பேசப்பட்ட இடமாகும்.  ‘வர்ணமேட்டில்’ மிகுந்த செல்வாக்குப்பெற்ற அமரர் முத்துக்குமாரு,அமரர் வள்ளிப்பிள்ளை ஆகிய தம்பதிகளின் ஐந்தாவது பிள்ளையாக 06.11.1942 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது பெருமதிப்புக்குரிய அமரர் முத்துக்குமாரு சிவபாலபிள்ளை அவர்கள்.

Sunday, October 27, 2013

சர்வதேச விருது பெற்ற ‘அடிவானம்’ குறும்பட இயக்குனர் பல்துறைக் கலைஞர் திரு.யோகராசா சுஜீதன்

அடிவானம்

‘விம்பம்’ சர்வதேச ஏழாவது குறுந்திரைப்படவிழா ‘இலண்டன்மா நகரில்’ 2011.நவம்பர் 11ஆந் திகதி மாலை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தென்இந்தியாவில் சிறந்த படங்களான ‘சாமுராய்’ ‘காதல்' 'கல்லூரி’ 'வழக்குஎண் 18/9' ஆகிய படங்களை இயக்கிப் புகழ்பெற்ற திரு.பாலாஜீ சக்திவேல் அவர்களும் ஆய்வாளரும், அரங்கியலாளரும், நாடக விமர்சகருமாகிய திரு.யு. ராம்சுவாமி போன்ற பலரும் மத்தியஸ்தம் வழங்கினர்.

Friday, October 25, 2013

'தமிழ்ப்பாஷை' நூல் வெளியீடு

தமிழ்ப்பாஷை

இந்நூல் எழுநா, நூலகம் ஆகியவற்றின் கூட்டுவெளியீடாக கடந்த 19.10.2013 இல் திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் "பகிர்வு" இலக்கியக்  குழுமத்தின் "முற்றத்துச் சந்திப்பில்" வெளியிடப்பட்டது.

Wednesday, October 23, 2013

‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ தந்த தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார்

வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்  திருவிழா

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் தம்பலகாமத்தின் முதுபெரும் கவிஞராக விளங்குகிறார் ஸ்ரீ.ஐ.வீரக்கோன் முதலியார் அவர்கள். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ‘வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்’ என்னும் பழந் தமிழ் நூல் இவரால் இயற்றப்பட்டது.

Tuesday, October 22, 2013

'மடை' - பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும், பாரம்பரிய கலைஞர்களின் கொண்டாட்டமும்


திருமலை நகரில் 'மடை' எனும் மகுடத்தில் நடைபெறவுள்ள 'பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும்,கலைஞர்களின் கொண்டாட்டமும்'

விருதுகள் பல வென்ற சூரியன் FM அறிவிப்பாளர் திரு.தில்லையம்பலம் தரணீதரன்

Tharaneetharan

தம்பலகாமம் வடக்கிலுள்ள ‘சம்மாந்துறை’ வயல்வெளியில் செந்நெல்லும் , அந்த வயல்வெளியின் அருகேயுள்ள ‘பாற்கடலில்’ முத்தும் அமோகமாக விளைந்ததால் நெல் அறுவடைக்காலங்களிலும் முத்துக் குளிப்பு நடைபெறும் காலங்களிலும் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் தொழிலாளர்களும் வியாபாரிகளும் வந்து குவியும் இடமாக ஒரு காலத்தில் சிறந்திருந்தது ‘சிப்பித்திடல்’ முத்துக்குளிப்போர் ‘சிப்பிகளை’ இத்திடலுக்குக் கொண்டு வந்து சிப்பிகளை உடைத்து ‘முத்துக்களைத்’ தேடிப்பெற்றுக் கொண்டதாக அக்காலத்தில் இருந்த பெரியார்கள் கூறுவர். சிப்பிகள் அதிகமாக காணப்பட்ட இடம் ‘சிப்பித்திடல்’ என அழைக்கப்பட்டது.

Sunday, October 20, 2013

பவள விழா - புகைப்படங்கள் - 3

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

பவள விழா - புகைப்படங்கள் - 2

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

பவள விழா - புகைப்படங்கள் - 1

பழைய மாணவர் சங்கம் தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

பவள விழா - புகைப்படங்கள்
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருகோணமலை

Saturday, October 19, 2013

திரியாய் மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு

திருகோணமலை வரலாறு

ஸ்ரீ அபைய
லா மேகச் ச
க்கரவர்த்திகள்
ஸ்ரீ ஜயபா ஹூ தே
வர்க்கு யாண்டு ப
தின் எட்டாவது தம்
பால் ஜீவிதமுடைய
கணவதித் தண்டநாத
நார் உதுத்துறை விக்
கிரமசலாமேகர் நால்
படையையும் ஆஸ்ரி
த்து பேருமிட்டு விக்
கிரிம சலாமேகன்
பெரும் பள்ளி திருவே
ளைக்காறர் அபையம்

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
432 ம் பக்கம்

Tuesday, October 15, 2013

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ்ரீ பலவன் புதுக்கு
டி யான் ஆதித்தப்
பேரரையன் ஸ்தவ்யா
றாமய னா மானாவதிளானா
ட்டு வெல்க வேரான
ராஜராஜ பெரும்ளிக்கு
வைத்த னொந்தா வி
ளக்கு 1 பசு 8
4
இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
412  ம் பக்கம்

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4

இராஜராஜப் பெரும்பள்ளி

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தானம்

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.

Friday, October 11, 2013

பழைய மாணவர் சங்கத்தின் பவள விழா நிகழ்வுகள் 19.10.2013

 பழைய மாணவர் சங்கத்தின் பவள விழா நிகழ்வுகள் 19.10.2013

எமது பழைய மாணவுர் சங்கம் 1937ம் செயல்பட்டுக்கொண்டிருந்தமைக்கான ஆதாரத்தைக் பெற்றதன் மூலம் (1937 – 2012) அகவை எழுபத்தைந்தில் 2012ம் ஆண்டு இப்பவளவிழா நிகழ்வினை சிறப்புற கொண்டாட முடியாமல் போனதன் விளைவால் 2013ம் ஆண்டு இந்நிகழ்வினை சிறப்பாகவும் , அழகுறவும் நடாத்தி முடிப்பதற்கு எமது பழைய மாணவர் சங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

Wednesday, October 09, 2013

கர்நாடக சங்கீத கலைஞர் திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

கணபதிப்பிள்ளை மகாலிங்கம்

தம்பலகாமத்து இரட்டையர்கள் எனச்சிறப்பிக்கப்படும் கலைஞர்களில் ஒருவரான திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்  தம்பலகாமம் கள்ளிமேட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சுதேச வைத்தியரும் அண்ணாவியாருமாகிய கந்தப்பர் கணபதிப்பிள்ளையின் இளையமகன். வாய்ப்பாட்டுக் கலைஞர். இவரது தமையனார் கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்களை முன்னரே நாம் அறிமுகம் செய்துள்ளோம்.

1941 ஆம் ஆண்டு பிறந்த இவர் தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் எட்டாந்தரம் வரை கல்வி பயின்றவர். 1967இல் விஐயலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு மகாலெட்சுமி, சுகுமாரன் ,நாகராசன், ராதாலெட்சுமி, சத்தியலெட்சுமி ஆகிய ஐந்து பிள்ளைகள். இவர்களில் திரு.ம.நாகராசன் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞராக மிளிர்வது குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 08, 2013

மெல்லிசைக் கலைஞர் திரு.கனகரத்தினம் (இ)லிங்கராசா

கனகரத்தினம் இலிங்கராசா

எண்ணூறு வருடகால வரலாற்றுப் பழமைமிக்க கள்ளி மேட்டில் கனகரத்தினம் காளிப்பிள்ளை தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு மாசிமாதம் 16ஆந்திகதி மகனாகப் பிறந்தவர் தான் நமது மதிப்புக்குரிய மெல்லிசைக் கலைஞர் திரு.இலிங்கராசா அவர்கள்.

தமது பத்தாவது வயதில் 'மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில்' இவர் தனக்கு ஒப்பாரும், மிக்காருமின்றிச் சிறந்து விளங்கினார். 'கணீர் என்ற குரலில்' இவர் பாடுவதை அனைவரும் விரும்பிக் கேட்டனர். 'காவடிப்பாட்டுக்களைப் பாடுவதிலும் 'உடுக்கு' என்னும் இசைக்கருவியை இலாவகமாகக் கையாள்வதிலும் புலமை பெற்றிருந்தார்.

Saturday, October 05, 2013

தம்பலகாமம் கல்வெட்டு

திருகோணமலை வரலாறு
1..................................
2.................................
3................................
4.................................
5. உடையார் நிச்ச
6. யித்த ஜகதப்ப
7. கண்டன் தாநத்(து)
8. க்கு நிலையாக்(கித்)
9. தம்பலகாம ஊ(ர்)
10. ரை நான் கெல்
11.லைக்கு தள எல்லை.

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
269 ம் பக்கம்

Friday, October 04, 2013

முறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து அவர்கள்


வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமத்தில் முன்மாரித்திடல் சிப்பித்திடல் என்னும் திடல்கள் மிகவும் செல்வாக்குப் பெற்ற திடல்களாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென உருவாக்கப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் கிராமதேவதைகளுக்குரிய வழிபாடுகளில் ஒன்றான 'வல்லிக்கண்ணருக்கான மடை வைபவம்' சிப்பித்திடலில் இடம்பெற்று வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

மாரிமுத்துச் சாஸ்திரியார் போன்ற புகழ்பெற்ற கலைஞரும் சின்னத்துரை அண்ணாவியாரும் இத்திடலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களேயாகும். முன்மாரித்திடலில் அமைந்துள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் தமது ஆரம்பக்கல்வியைப் பெற்றுக்கொண்ட திரு.ஜெயசாகரன், திரு.ஜெயவர்ணன், திரு.ஜெயகாந்த் ஆகியோர் இன்று அரச வைத்தியர்களாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று  திரு.தி.தரணீதரன் 'சூரியன் வானொலியில் புகழ்பெற்ற அறிவிப்பாளராக' கடமையாற்றுவதையும்  இங்கே குறிப்பிடுவது சாலச்சிறந்தது.

Thursday, October 03, 2013

நிலாவெளி தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ் (வஸ்தி ஸ்ரீ)…
சா ஸநம் சாஸ்வத ம் ம்பு ஸ்ரீ கோணபர்வத ம் திருகோண
மலை மத்ஸ்யகேஸ்வரமுடைய மஹா தே வற்கு நிச்சலழிவு
க்கு நிவந்தமாக சந்தராதித்தவற் செய்த உராகிரிகாம கி(ரி)
கண்ட கிரிகாமம் நீர் நிலமும் புன்செய்யும் இடமும்
ஊர்ரிருக்கையும் தே வாலயமும் மே நோக்கிய ம
ரமும் கீழ் னொக்கிந கிணறும் உட்பட்ட இந்நிலத்து
க் கெல்லை கிழக்குக் கழி எல்லை தெற்கெல்லை க
ல்லு குடக்கு எத்தகம்பே எல்லை வடக்கெல்
லை சூலக்கல்லாகும் சுடர் கோணமா மலை தனி
ல் நீலகண்டர் (க்)கு நிலம் இவ்விசைத்த பெருநான்
கெல்லையிலகப்பட்ட நிலம் இருநூற்று
ஐம்பத்திற்று வேலி இது பந்மா யே
ஸ்வரரஷை

இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
406 ம் பக்கம்

Wednesday, October 02, 2013

பலதுறைகளிலும் சாதனை படைத்த கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

கணபதிப்பிள்ளை அண்ணாவியார்

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு 'கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னன்' காலத்திலிருந்து மக்களால் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். இம் மன்னனின் ஏற்பாட்டில் கண்ணகியம்மன் விழா மிகச்சிறப்பாக ஆண்டுக்கொருமுறை கள்ளிமேட்டு 'வேள்வி வளாகத்தில்' நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

புகழ் பூத்த கலைஞர்களும் அண்ணாவிமார்களும் சுதேச வைத்தியர்களும் இந்தக் கள்ளிமேட்டைத் தாயகமாகக் கொண்டவர்களேயாகும். இவர்களில் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் மிகவும் பிரபலியமானவர். தனது தந்தையிடம் வைத்தியத் தொழிலை முறையாகக்கற்றுக் கொண்ட இவர் அந்தக் காலத்தில் சுதேச வைத்தியத்தில் மிகவும் பிரபலியம் பெற்றிருந்தார்.

இலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3

தமிழ் பௌத்த தேரர்கள்

பதி(பதவியா) நகரில் அமைந்த வேளைக்காற விகாரம் 

பண்டை நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே  இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சிவாலயங்கள் அமைந்திருந்தன. பல சமூகப்பிரிவுகளைக்கொண்டிருந்த வளர்ச்சிடைந்த பட்டினங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று ஐம்பொழில் பட்டினம்.

ஐம்பொழில் பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு வேளைக்காறர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் சமஸ்கிரத மொழிச் சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது.

Tuesday, October 01, 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு


தமிழ் விக்கிப்பீடியா ஒரு இலாப நோக்கற்ற கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். கூட்டு முயற்சித் தன்னார்வத் திட்டமான இது 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. http://ta.wikipedia.org என்ற முகவரியில் இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவை நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் படிக்கிறார்கள். பல நாடுகளையும் துறைகளையும் சேர்ந்த 11 வயது முதல் 77 வயது வரையிலான பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் எழுதி வருகிறார்கள்.இன்று 935 பங்களிப்பாளர்களை எட்டியுள்ள தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ இரண்டு கோடி சொற்களைக் கொண்ட 55,881 கட்டுரைகள் உள்ளன.

Friday, September 27, 2013

'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2

புத்தர்

தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி

1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில்  மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.

கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

Thursday, September 26, 2013

திருகோணமலையின் வயலின் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம்


எண்ணூறு வருடகாலப் பழமையுடைய தம்பலகாமத்தில் 'கூட்டாம்புளி' என்னும்திடல் பிரசித்தமானது.'கூட்டம் கூட்டமாக புளி வளர்த்த கூட்டாம்புளி'என கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் இதனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கேரளத்துப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.சத்தியமூர்த்தி அவர்களும், சங்கீத இசை ஆர்வலர் திரு.மாரிமுத்து அவர்களும், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் அறக்காவல் சபையின் செயலாளர் திரு.நாகராசா அவர்களும் இத்திடலைத் தாயகமாகக் கொண்டவர்கள்.

Wednesday, September 25, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1

Gautama Buddha

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை

திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் பெரியகுளம் பகுதி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும். இங்கு வெல்கம் விகாரை அமைந்திருக்கிறது. வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளி திராவிடக் கலைப்பாணியில் அமைந்த ஒரேயொரு 'தமிழ் பௌத்த பள்ளியாகும்'. இதன் இன்னொரு பெயர் நாதனார் கோவில் என்பதாகும்.

Wednesday, September 18, 2013

தம்பலகாமத்தின் இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்


தம்பலகாமத்தின் இளங்கவிஞனாகிய திரு.கணேசபிள்ளை சுமனின் ‘ஊன்றிய விழுது’ ‘பிரபஞ்சம்’ ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் அண்மையில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்டன.

திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கு.திலகரத்தினம் அவர்களின் தலைமையில் இவ்வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. தம்பலகாமத்தின் பிரதேசச் செயலர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்.

ஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ஞாபகமீட்டல்

ஆலங்கேணி

உப்பு நீர்ச் சிற்றாறு ஊரும் - தென்றல்
ஓடி வந்து மரஞ்செடியில் சாரும்
செப்பலியும் மீனினமும் கூடும் - ஊரி
சேர்ந்து ஊதச் சிள்வண்டும் பாடும்.

கண்ணா வேர் மூச்செறிந்து வெடிக்கும் - கேட்ட
கான் குருவி மேலெழுந்து நடிக்கும்
மண் அளைந்து நண்டு விளையாடும் - மேதி
மாவலியின் தண் கரையை நாடும்

Monday, September 16, 2013

2013 பழைய மாணவர் ஒன்று கூடல் - புகைப்படங்கள்

Old Boys Association of Trincomalee RKM Sri Koneswara Hindu College

பழையமாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்று துறைசார் உன்னத நிலையை அடைந்த பழைய மாணவர்களை வருடாந்த பழைய மாணவர் ஒன்று கூடலில் அழைத்து கௌரவிப்பது எமது நடைமுறை.

தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி

தம்பலகாமம்

தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வின் ஒரு பகுதியாக ‘தம்பலகாமம்’ என்னும் ஊரின் வரலாற்றுத் தொன்மைதனை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம்.

Thursday, September 12, 2013

'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6

Thampalakamam

1815 ஆம் ஆண்டு பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அவற்றின் பிரதிகள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் என்ற தொகுப்பாக வெளிவந்தன.  தம்பலகாமப்பற்று வன்னிமை பற்றியும் ,அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்களாக இவ்வாவணம் விளங்குகின்றது.

Wednesday, September 11, 2013

சண் இசைக்குழுவின் ஸ்தாபகர் பாடகர் கலைஞர் திரு.சண்முகலிங்கம் முருகதாஸ்

Muruhadas

கல்விமேடு தம்பலகாமத்தில் பழமையில் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். ‘கள்ளி  மேடே’ காலப்போக்கில்  கல்வி  மேடாக மருவியது என அறிஞர் கூறுவர்.தம்பலகாமத்தில் புகழ் பூத்த கலைஞர்களும் ஆயுள்வேத வைத்தியர்களும் வாழ்ந்த இடம் கல்விமேடே.

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலின் வெளிச்சுற்று வாழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்ற ‘கண்ணகி அம்மன் பொங்கல்விழா’ வருடாவருடம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததுடன் இவ்வழிபாடுகளுக்கென ‘கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னனால்’ கல்வி மேட்டு ஆலையடியில் ஒரு வேள்வி வளாகமே வளங்கப்பட்டிருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

1987 '' கோணைத் தென்றல் '' இலக்கியத் திங்கள் ஏடு

கோணைத் தென்றல்

Monday, September 02, 2013

பழைய மாணவர் சங்கம் - தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

R.K.M. Sri Koneswara Hindu College

திருகோணமலை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி நிறுவனமாக 116 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான பணிகளை சமூகத்துக்கு ஆற்றி வருவதில் எமது கல்லூரி முன்னிலை வகிப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விடயமாகும். மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் எமது கல்லூரி தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று கல்விச் செயற்பாட்டிலும், ஏனைய இணைப் பாடவிதானங்களிலும் சிறப்பாக செயற்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.

இப்பெருமைக்குரிய கல்லூரியின் அபிவிருத்திப் பணியில், அதன் வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் தம்மை இணைத்துக்கொள்ளும் உயரிய சிந்தனையில் எமது பழைய மாணவர் சங்கம் இயங்கி வருவதையிட்டு நாம் பெருமைகொள்ள வேண்டும்.

பவள விழாவை நோக்கி பழைய மாணவர் சங்கம்

R.K.M. Sri Koneswara Hindu College

வரலாற்று புகழ் மிக்க திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள புனித நகராகிய திருக்கோணமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் முண்ணனியில் திகழ்ந்து வரும் தேசிய பாடசாலையான எமது கல்லூரிக்கு அதன் வளர்ச்சிப் போக்கில் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் அமைவதற்காக பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது.

Friday, August 30, 2013

ஆர்மோனியக் கலைஞர் திரு.சி.கனகரத்தினம்


தம்பலகாமம் தெற்குப்பகுதியில் ‘பச்சைப் பசேலென’ வயல்களால் சூழப்பட்ட இடமாக அமைந்துள்ளது மாக்கைத்திடல். புழமையில் ‘திருமால் கை’ என்னும் கிருஷ்ணகோயில் இத்திடலில் அமைந்திருந்ததாகவும் காலப்போக்கில் இக்கோயில் சிதைவுற்று அழிந்து போனதாகவும் அறியக்கூடியதாக உள்ளது. திருமால் கை என்னும் கோயில் அமைந்திருந்த இடம் திருமால்கை என வழங்கப்பட்டது.

திருமால்கையே காலப்போக்கில் சிதைந்து மாக்கைத்திடலாக மாறியது. சிதைவுற்ற இக்கோயிலின் அழிபாடுகள் கலைஞர் கனகரத்தினத்தின் மூத்த சகோதரரின் காணிக்குள் காணப்படுகிறது. தம்பலகாமத்தில் பெரிதும் பேசப்படுகிற ‘குடமுருட்டி ஆறு’ இக்கிராமத்தின் எல்லை அருகாக ஓடுகிறது.

Thursday, August 29, 2013

சம்பூர் பிரதேசத்தின் தொன்மை - நூல்வெளியீட்டு அழைப்பிதழ்

சம்பூர் பிரதேசத்தின் தொன்மை

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5

குளக்கோட்டன்

திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு முன்னரும், பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Tuesday, August 27, 2013

நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்

 திசவீரசிங்கம்

திரு.மாசிலாமணி அவர்களுக்கும் வீராசி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த
நாடகக்கலைஞர் திசவீரசிங்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகக் கடமையாற்றியவர். தம்பலகாமம் ‘நடுப்பிரப்பந்திடலில்’தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

நாடகத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்க இவர் முற்போக்கானசிந்தனையாளன்.  தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற என்னையும் எனது சினேகிதர்களாகிய திரு.ச.மனோகரலிங்கம், திரு.க.சின்னராசா , திரு.சி.குணரத்தினம் போன்ற கலையார்வம் மிக்க மாணவர்களையும் ஒன்றாக இணைத்து 'கொலைகாரன்',‘சுமதி எங்கே?’ ,‘தூக்குத்தூக்கி’ போன்ற சமுக நாடகங்களை அரங்கேற்றினார்.