Showing posts with label தமிழ் கேட்க ஆசை. Show all posts
Showing posts with label தமிழ் கேட்க ஆசை. Show all posts

Wednesday, October 30, 2013

மின்நூல் - ''தமிழ் கேட்க ஆசை'' - கட்டுரைத் தொகுப்பு


திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவரது கட்டுரைகளில் பல  இவரது மண்ணின் , தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.
கலாவினோதன்,த.சித்தி அமரசிங்கம்.

Sunday, September 02, 2012

திருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது.  “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.

தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
Alenkerny

இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர்.  இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

Friday, September 04, 2009

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் களிப்பூட்டும் சிரிப்புக் கவிதைகள்


கல்வியில் பெரியவன் கம்பன் என்ற சொற்றொடர் பிரசித்தம் வாய்ந்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாம்பின் கால்களை இன்னொரு பாம்பினால் தான் நன்கு அறிய முடியும் என்று கூறுவதற்கேற்ப ஒரு புலவராகிய இவர் இன்னொரு பெரும் புலவராகிய கம்பரைப் பற்றி நன்கு அறிந்து நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

கம்பரின் கவித்திறன் ஆச்சரியமானது என்பது பாரதியின் வாதம். கவி அரசர் தமிழ் நாட்டின் தலைசிறந்த புலவர்களைப் பற்றி பேசும் போதெல்லாம் கம்பரை முன் வைத்துப் பேசுவதையும் கம்பர், வள்ளுவர், இளங்கோ என்று கம்பரை முன்வைத்துப் புலவர்களை வரிசைப்படுத்திக் கூறுவதையும் கம்பனென்ற மானிடன் பிறந்து நடமாடிய தமிழ் மண்ணில் தாமும் பிறந்து வாழ்வதை இட்டுப் பாரதியார் பெருமை கொள்வதையும் காண முடிகிறது.

உயரிய கருத்துக்களை ஓசை நயத்துடனும் உவமான அழகுடனும் கவிதை உருவில் எடுத்துக் கூறுவதில் ஈடு இணையற்றவராக இருப்பதுடன் சிரிப்பூட்டும் நகைச்சுவைப் புலமையிலும் கவிச்சக்கரவர்த்தி நிகரற்று விளங்குவதைக் காணலாம். 

Thursday, September 03, 2009

கவிச் சக்கரவர்த்தி நிகழ்த்திய ருசிகர விளக்க உரை!


நான்காண்டு கற்றும் வகுப்பில் சித்தியெய்தாமல் வறுமையின் தீவிரத்தால் கற்றலை நிறுத்தியவன், வாலிபனாகித் திருமணம் செய்துகொண்ட பின் காட்டில் சென்று விறகுவெட்டிச் சுமந்து வந்து விற்று, அவனும் மனைவியும் மிகக் கஷ்டமாகச் சீவித்து வந்தனர்.

Sunday, July 12, 2009

தமிழ் கேட்க ஆசை


{கட்டுரைத் தொகுப்பு}
வெளியீடு –பொற்கேணி கிராம அபிவிருத்திச் சங்கம், தம்பலகாமம்.

திரு. தம்பலகமம் க. வேலாயுதம் அவர்களின் தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பை வாசித்த போது, எனக்கு விநோத மஞ்சரி என்ற நூலே ஞாபகத்திற்கு வந்தது. தமிழ் கேட்க ஆசை என்ற கட்டுரைத் தொகுப்பில் முப்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. அன்றைய நிலையில் விநோத மஞ்சரிக் கட்டுரைகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் இவரது கட்டுரைகள் முக்கியமானதும் அவசியமானதுமே. இவரது கட்டுரைகளில் பல இந்த மண்ணின் - இவரது மண், தம்பலகாமம் மண்ணின் வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. சில கட்டுரைகள் ஆய்வை நோக்கி இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அதன் தன்மையில் தனித்துவமாகவே இருக்கிறது. திறமையாக எழுதப்பட்டிருக்கிறது.

வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும் என்பதற்கு தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் ஒரு உதாரணம் என்றால் அது மிகையாகாதது மட்டுமல்ல பொய்யுமல்ல. தம்பலகாமம் கிராமம் எத்தகைய வளங்களையுடையது என்பதை அறிந்தவர்கள்தான் அறிவார்கள். கல்வி வசதி குறைந்த, நூல் நிலையங்களோ, நூல் சந்தை அகங்களோ அற்ற அக்கிராமத்தில் (தன் தேடல்மூலம் நூல்களைத்தேடி வாசித்து) வாழ்ந்த க.வேலாயுதம் அவர்கள் அதனூடாக தன் கலை இலக்கிய உணர்வுகளை வெளிக்கொணர்வதில் மற்றவர்களைவிட எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல என்பதை, தமிழ் கேட்க ஆசை என்ற நூலின் மூலம் நிரூபித்துள்ளார்.

Monday, June 29, 2009

திருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ணாப்பூபால வன்னிபம்


ஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பினான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.

Saturday, May 16, 2009

தம்பலகாமம்

தம்பலகாமம்
இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகச் சிவவழிபாடு நடைபெற்று வரும் தெய்வீகச் சிறப்பு உள்ளதால், ஊர் பெயருக்கு முன்னால் திரு என்ற சிறப்பும் சேர்ந்து திருத்தம்பலகாமம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. மிகுந்த அருள் சிறப்புடைய மகாதலங்களுக்கே ஸ்தல புராணம் இருக்கின்றது. திருத்தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்துக்கு ஸ்தலபுராணம் இருப்பதுடன் தம்பலகாமம் ஊருக்கும் புராணம் இருக்கிறது.

Friday, May 15, 2009

கண்தழையே கந்தளாய் ஆனது

திருமலை
பண்டையில் திருமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை நான்கு பற்றுக்களாகப் பிரித்தனர். மாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு பண்டைக்காலத்தில் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்தது. நான்மறை ஓதும் வேதியர்கள் வாழ்ந்து வந்ததால் இந்தப் பெயர் காரணப்பெயராக வந்ததாக அறிய முடிகிறது. இந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் விவாக ஒப்பந்தம் செய்து கொண்ட குளக்கோட்டு மன்னர், அரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.

திருக்கோணமலையின் தெய்வீகச் சிறப்பு

திருமலை
இந்த நில உலகத்தில் உச்சமான உயரத்தில் சிவபிரான் உமாதேவியோடு உறையும் மகா மலைத்தலம் கைலாயம். கடலின் மேல் மட்டத்தில்
இருந்து 22028 அடி உயரத்தில் இமய மலையின் உச்சியில் பார்வதி சமேதரரான சிவபெருமான எழுந்தருளி உள்ள கைலாய மலை உள்ளதென வரலாறு கூறுகின்றது.இறைவன் ஆதிசேடன், வாயுதேவன் இவர்களின் பலப்பரீட்சை காரணமாக கைலாய மலையின் சிகரங்களில் ஒன்றை இலங்கையின் வட கடலில் விழச் செய்து தென் கைலையாகிய திருக்கோணமலை என்ற திருப்பதியை உருவாக்கித் தந்தான் எனப் பக்திபூர்வமாகச் சைவ மக்கள் நினைவு கூருகின்றனர்.

Tuesday, May 05, 2009

நீதியும் அநீதியும்....


{நன்றி admirableindia.com}
பகல், இரவு, வெயில், மழை, நீதி, அநீதி, இன்பம், துன்பம் என இந்த உலகம் எல்லா விதங்களிலும் இரு விதமான நிலையிலேயே இயங்கி வருகிறது. இயற்கையின் இந்த இரு நிலைகளும் கால மாற்றத்தாலும் மாற்ற மடையாத உறுதியான நிலையிலேயே இருந்து வருகின்றன. ஆயினும் மனித வாழ்க்கையின் மேம்பாடு கருதி மேலோர்கள் அநீதி அருகி நீதி மேலோங்க வேண்டும் என்று பண்டு தொட்டு இன்றுவரை முயற்சித்தும், குரல் கொடுத்தும் வந்துள்ளனர். 

Wednesday, March 25, 2009

புலவரின் மனஅங்கலாய்ப்பு


உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் தொகையான மக்கள் தொழில் செய்து ஊதியம் பெற்று உயிர் வாழவும் உலகில் பல விதமான தொழில்கள் இருக்கின்றன் ஆயினும் சிலர் உலகில் உள்ள எல்லாவற்றிலும் கல்வியே சிறந்த தென்று ஆராய்ந்து அறிந்து கல்வியை கசடறத் துறைபோகக் கற்று பாண்டித்தியம் எய்தி ஆற்றல் மிக்க கவிவாணர்களாக அழகும் அறிவுமிக்க கவிதைகள் புனைந்து மனித குலத்தை நெறிப்படுத்தும் பெரும்தொண்டு புரிந்து வருகின்றனர். மானிட சமூதாயத்தின் சீலமான நல்வாழ்வுக்காக தங்கள் முழுக்காலத்தையும் செலவிட்டு வரும் படித்த மேதைகளான புலவர் பெருமக்கள் தங்கள் வாழ்வைக் கழிக்கும் நோக்கில் பொருள் தேடுவதென்பது இயலாத காரியம்.

Saturday, March 14, 2009

விசித்திரமான தேவலோகம்!

கட்டுரை
இக்கதையை விஸ்வாமித்திரர் இராமாயணத்தில் குலமுறை கிளர்த்தும் படலத்தில் இராம இலட்சுமணர்களுக்குக் கூறுகிறார். இதனால் தொடர் முயற்சிகளுக்குப் பகீரத முயற்சி என்றும் கங்கைக்குப் பகீரதி என்றும் காரணப் பெயர்கள் வந்தன.

Friday, March 13, 2009

நீதி காத்த பாண்டிய மன்னர்கள்

கட்டுரை
இந்திய உபகண்டத்தின் தென் பகுதியில் மூன்று தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களில் பாண்டிய மன்னர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை வளர்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக விளங்கினர். சங்கம் அமைத்துப் புலவர்களுடன் தாங்களும் உடனிருந்து ஆராய்ந்து இவர்கள் தமிழ் வளர்த்தனர் என்பதைத் தமிழ் உலகம் நன்கறியும்.

Tuesday, March 10, 2009

கூந்தலில் மலர் சூடும் பழக்கம்!



இந்த நில உலகில் பரிசுத்தமான,தூய்மையானவைகள் செடிகளில் அன்றாடம் மலரும் பூக்களே. எனவேதான் மனிதர்கள் இறைவனுக்குப் பூக்களை அர்ச்சித்து வணங்குகின்றனர். ஆயினும் இந்த மலர்களை விட இறைவனுக்கு மிகவும் விருப்பமான பொருள் மனிதனிடம் இருக்கின்றது என்று சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு கூறுகின்றார்.

Wednesday, February 11, 2009

நெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி !




திருமலைகளத்து மேட்டிலும் தேன் காட்டிலும் பொலிவை நாடும் புதுவார்த்தைகள்
தமிழ் இனத்தின் தாய் மொழியாகத் தமிழ் இருந்து வருகின்றது. ஆயினும் தம்பலகாமப் பகுதி தமிழ் முன்னோர்கள் உயிர்காக்கும் நெல்லைச் சேமிக்கும் களத்து மேட்டிலும், பூலோக அமிர்தம் என்று போற்றப்படும் தேன் எடுக்கும் பொது காட்டிலும் பேசுவதற்கெனத் தங்கள் தாய் மொழியான தமிழில் இருந்து பாஷைகளைத் தோற்று வித்துப் பேசிவந்துள்ளனர். இந்த விசித்திர மொழிகள் இன்று பேச்சு வழக்கற்று மறைந்து கொண்டிருக்கின்றன. கால மாற்றத்தின் காரணமாக களத்து மேட்டில் விவசாயிகள் பேசிவந்த பாஷை தேவையற்றதாகவும் ஆகியுள்ளது. 

Monday, February 09, 2009

நாடகக் கலை அருகி,அழியும் நிலை

 தம்பலகாமம்இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பழமைஉடைய தமிழ் உழவர்களின் வாழ்விடம் தம்பலகாமம். இங்கு சங்கீதக்கலையும், ஆயுள்வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

Sunday, September 21, 2008

இரு பிரிவுகளாக அமைந்த ஆலய வழிபாடு, தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயம்.....

Thampalakamam
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயிலில் இரு பிரிவுகளாக அமைந்த வழிபாடுகள் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன.வரலாற்றுப் புகழ்மிக்க இக்கோயிலை, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஜெயதுங்க வரராசசிங்கன் என்னும் மன்னன் கட்டினான் என்றும் தம்பலகாமத்திற்கு மேற்கேயுள்ள "ஸ்வாமிமலை' என்னும் இடத்திலிருந்து ஆதிகோண நாயகர் திருவுருவையும் ஏனைய பரிவாரத் தெய்வங்களையும் மேளதாளத்துடன் கொண்டு வந்து இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என்றும் திருகோணாசலப் புராணம் கூறுகிறது.
.