Saturday, November 14, 2015

இலவச மருத்துவ முகாமும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும் - புகைப்படங்கள்


உலக பாரிசவாத விழிப்புணர்வு தினத்தினை (29.10.2015) முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கினையும், இலவச மருத்துவ முகாமினையும் தம்பலகாமத்தில் நடாத்தும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. வைத்திய நிபுணர் DR..கனேய்க்கபாகு கருத்தரங்கினை தலைமையேற்றுச் செய்வதற்கான தனது விருப்பத்தினைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

Wednesday, November 11, 2015

ஏக்கம்,பேச்சம் செயலும் - (கவிதை நூல்கள்)


ஊடகவியலாளர் சேனையூர் அ. அச்சுதன் எழுதிய பேச்சம் செயலும் கவிதை நூல் மற்றும் கலாபூசனம் சிவஸ்ரீ. அ. அரசரெத்தினம் ( சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய பிரதம குரு) அவர்கள் எழுதிய ஏக்கம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.10.2015 புதன் கிழமை திருகோணமலை நகரசபையின் பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எழுதலாம் கவிதை இதழின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

Thursday, November 05, 2015

நல்லதோர் வீணை - கேணிப்பித்தன் ச.அருளானந்தம்


கேணிப்பித்தன் ச.அருளானந்தம் அவர்கள் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் 24.10.2015 அன்று இடம்பெற்றது.

Monday, November 02, 2015

கவிஞர் த.ரூபனின் "ஜன்னல் ஓரத்து நிலா"


திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும்  மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.

Wednesday, October 21, 2015

கப்பல்துறையில் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


கப்பல்துறைக் கிராமத்தில் இயங்கும் இளைஞர் கழகத்திற்கு 16.10.2015 அன்று விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு செய்யப்பட்டது. பிரித்தானியாவில் வசிக்கும்  திரு. ஏரன் அரசசிங்கம் (MR. AARAN ARASASINGAM) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்களை திரு.ஜெயக்குமார், திருமதி. மங்களா ஜெயக்குமார் தம்பதியினர் வழங்கி வைத்தனர்.

Tuesday, October 20, 2015

நன்றி கலைக்கேசரி - புகைப்படங்கள்


வயல்வெளியும், மலைகளும் ,பிரமாண்டமான நீர்த்தேக்கமும் கொண்டமைந்த இயற்கை வனப்பு நிறைந்த பூமி கந்தளாய்.  இன்று கந்தளாயில் 13679 குடும்பத்தினைச் சேர்ந்த 50961 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 40467 பேர் சிங்களவர்கள்;,  8746 பேர் முஸ்லீம்கள் ,1748 பேர் தமிழர்கள். 

Monday, October 19, 2015

Dr.ஸதீஸ்குமாரின் நூல் வெளியீட்டு நிகழ்வு - புகைப்படங்கள்


வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்கள் எழுதிய “அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாறும் மகிமையும்” என்ற நூலின் வெளியீட்டுவிழா 12.10.2015, திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் கவிஞர்.க.யோகானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Sunday, October 18, 2015

தேசிய சேமிப்பு வங்கியில் வேலைவாய்ப்பு


தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் (Marketing Assistant- I) பதவி வெற்றிடம்.

Thursday, October 15, 2015

நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்


திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

Friday, October 09, 2015

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 11.10.2015


தம்பலகாமத்தில் இரு நூல்களின் வெளியீட்டு விழா.
(11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி )

திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Thursday, August 20, 2015

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தல்


திரு.வேலாயுதம் தங்கராசா அவர்கள் ஓய்வு பெற்ற அதிபர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டதாரி, தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின்படிப்பை முடித்தவர். வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில், மரபுவழி அறக்காவலர்களில் ஒருவராகக் ‘கங்காணம்’ என்னும் பதவி வகிப்பவர். தம்பலகாமத்தின் மூத்த எழுத்தாளர் திரு.க.வேலாயுதம் அவர்களின் அன்புமகனாகிய இவர், இளம்வயதில் இருந்தே எழுதுவதில் அதீத ஆர்வமுள்ளவராக இருந்து வந்துள்ளார். இவரது பல இலக்கியப் படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, மித்திரன், மலைமுரசு ஆகிய தினசரி, வாரப்பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

Thursday, August 13, 2015

வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !


எனது அப்பப்பா (அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்) நல்ல கதைசொல்லி. தனது அனுபவங்களையும் பல இடங்களிலும் தான் வாசித்தறிந்த விடையங்களையும் இணைத்து சுவைபட சொல்லும் வல்லமை பெற்றவர். மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர் வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் என்று நீண்டு செல்கிறது அவரது ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களின் பட்டியல். அவற்றில் வந்த அவரது ஆக்கங்களை எப்படிச் சேகரித்து வைத்திருந்தாரோ அதே அளவு ஆர்வத்துடன் அவ்வாக்கங்களுக்கு வந்த விமர்சனங்கள், வாசகர் கடிதங்கள், என்பனவற்றையும் பாதுகாத்து வைத்திருந்தார்.

Wednesday, August 05, 2015

தம்பலகாமத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச கருத்தரங்குகள் - புகைப்படங்கள்


நாடளாவியரீதியில் நடத்தப்படும் பரீட்சைகள் நெருங்கி வரும் போது நகர்ப்புறங்களில் கருத்தரங்குகள் பல இடம்பெறுவது வழமை. இந்த வாய்ப்புகள் கிராப்புறங்களுக்கு அரிதாகவே கிடைக்கிறது. எனவே இம்முறை 2015 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தம்பலகாமத்தில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கினை  செய்வதற்கான முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Tuesday, August 04, 2015

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் நாடாளுமன்ற பிரநிதித்துவம்


விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1977 இல் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இம்முறைப்படியே இன்றுவரை நடைபெறுகின்றன.

இலக்கியப்பூக்கள் 2 இல் தம்பலகாமம் க. வேலாயுதம்

முல்லை அமுதன்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,  இலங்கை)  ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Tuesday, July 21, 2015

சிவநய அறநெறிப்பாடசாலையில் சத்துணவுத் திட்டம் - புகைப்படங்கள்


கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்காலிகமாக சிவநய அறநெறிப்பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60 மாணவர்கள் நான்கு தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் கல்விபயின்று வருகிறார்கள். இப்பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை நடாத்தப்படுகிறது. பலசிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்


திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.

Friday, July 10, 2015

வேலைவாய்ப்பு - நில அளவைக் கள உதவியாளர்கள்


நில அளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் உள்ள ஆரம்ப மட்ட - பகுதி தேர்ச்சிபெற்ற (PL02-2006A)  நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காகத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Wednesday, July 08, 2015

ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர் பயிலுனர்களை இணைத்துக்கொள்ளல்


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் துணை மருத்துவ சேவையில் கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடநெறியின் பயிற்சிக்கு இணைத்துக் கொள்வதற்காக க. பொ. த. (உ. த.) பரீட்சையில் 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


Thursday, July 02, 2015

திருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)


230 கிராமசேவகர் பிரிவுகளையும், 11 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் கொண்ட திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, மூதூர், சேருவில்லு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளைக் கொண்டது. 2012  ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட குடித்தொகை விபரம் கீழ்வருமாறு.

Thursday, May 28, 2015

1900 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் - புகைப்படங்கள்


இலங்கையில் உள்ள பெரிய  கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத் தளம் (Sri Lanka Navy (SLN) Dockyard) பிரித்தானிய ஆட்சியின் கீழ்   Royal Naval Dockyard ஆக இருந்த 1900 ஆம் ஆண்டு புகைப்படங்கள்.

அறநெறிப் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


தம்பலகாமம் சிவசக்திபுரம் அறநெறிப்பாடசாலை மாணாக்கர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் சிவசக்திபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் மண்டபத்தில் அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர் திரு.வே.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இவ்வறநெறிப் பாடசாலையில் 35 மாணாக்கர்கள் கல்வி கற்கின்றனர். இரண்டு ஆசிரியைகள் கடமையாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 13, 2015

மாயனின் ‘அவனும் அதுவும்’ (சிறுகதைத் தொகுப்பு)


ஈழத்து இலக்கிய உலகில் தடம்பதிக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக ‘மாயன்’ என்னும் புனைப்பெயருக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் திரு.இரா.ஸ்ரீஞானேஸ்வரன் காணப்படுகிறார். இலக்கியத்துறை மீது மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற இவர் பத்திரிகைத்துறையில் தனது பங்களிப்பைச் சிறப்பாக செய்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 06, 2015

கந்தளாய்ப் பூதங்களின் கதை


08.06.1786 இல் தம்பலகாமத்தில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணமான ஒல்லாந்த ஆளுனர் அக்காலத்தில் தம்பலகாம மக்களிடையே பூதங்கள் தொடர்பாக இருந்த அச்ச உணர்வு பற்றி விபரித்திருக்கிறார். இந்தப் பூதங்களின் கதை சுவாரிசமானது. என்னறிவுக்கு எட்டியவரை இந்தப் பூதங்கள் தொடர்பான நம்பிக்கைகள் 1985 காலப்பகுதிவரை தம்பலகாம மக்களிடையே பரவலாக இருந்தது. பின்வந்த நாட்களில் புதிதாக உருவான இனவன்முறைப் பூதம் இந்தப் கந்தளாய்ப் பூதங்களின் கதைக்களை வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவைத்துவிட்டது.

Tuesday, May 05, 2015

ஊடகம் பற்றி தமிழில் - Tamil Journalism


ஊடகவியல் (Journalism) அல்லது இதழியல் என்பது, செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்காகச் செய்திகளை அல்லது செய்திக் கட்டுரைகளை சேகரித்தல், எழுதுதல், தொகுத்தல், வெளியிடுதல் என்பவற்றை உள்ளடக்கிய துறை ஆகும்.

Thursday, April 30, 2015

‘கொட்டியாபுரத்து சிங்கம்’ குறுநாவல் வெளியீட்டுவிழா - புகைப்படங்கள்


வைத்தியகலாநிதி அருமைநாதன் சதீஸ்குமார் எழுதிய ‘கொட்டியாபுரத்து சிங்கம்’ வரலாற்றுக் குறுநாவல் வெளியீட்டுவிழா 25.04.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபத்தில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் திரு.எஸ்.ஆர். தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Wednesday, April 29, 2015

எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் Higher Educational Institutions in Sri Lanka


இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கையின் உயர்கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய கல்வி வளத்தை பெருக்குவதும் உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தகுதியுள்ள சிறந்த மனித வளத்தை உருவாக்கி ஆராய்ச்சி மற்றும் ஆளணியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

Tuesday, April 28, 2015

NDT Admission 2015/ 2016 University of Moratuwa


தொழில்நுட்பவியல் நிறுவனம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கைநெறிக்கான
அனுமதி – 2015/ 2016

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின், தொழில்நுட்பவியல் நிறுவனத் தினால்
நடாத்தப்படும் மூன்று வருடகால முழுநேர தொழில் நுட்பவியல் டிப்ளோமா
கற்கைநெறிக்குத் தெரிவுசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிட
மிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கற்கைநெறியானது,
தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கான புதிய நிலையங்களில் நடத்தப்படும்
வரை, மொறட்டுவைப் பல்கலைக்கழகக் கட்டிட நிலையங்களிலேயே
நடாத்தப்படும்.

Friday, April 24, 2015

உலகம் தழுவிய கவிதைப்போட்டி-2015


ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் 
உலகம் தழுவிய கவிதைப் போட்டி

கவிதை எழுத வேண்டிய தலைப்பு.
இணையத் தமிழே இனி..

கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்   -    15-05-2015

Tuesday, April 21, 2015

'கொட்டியாபுரத்துச் சிங்கம்' - (கி.பி 1600-1700) - புகைப்படங்கள்


நண்பர் Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் சம்­பூரைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர்.  சம்பூர் மகா வித்­தி­யாலயம்,  திரு­கோ­ண­மலை ஸ்ரீ கோ­ணேஸ்­வரா இந்துக் கல்­லூரி ஆகி­ய­வற்றின் பழைய மாண­வர். இவர் தற்­போது திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் வைத்தியராக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கிறார். சமூக அக்கறையும், இடைவிடாத வரலாற்றுத்தேடலும், மொழிப்பற்றும் கொண்டவர்.

Monday, April 20, 2015

வேலைவாய்ப்பு - வங்கித்தொழில் உதவியாளர்கள் (பயிலுநர்கள்) - இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கி அதன் குழுமத்துடன் இணைந்து கொள்வதற்கு சாமர்த்தியமான,
புத்திக்கூர்மையான, குழுவாக பணியாற்றக்கூடிய இளவயதினரை அழைக்கிறது.

Thursday, April 16, 2015

'பெயர்' சிறப்புத் தொகுப்பு 2002 - புகைப்படங்கள்


2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலையிலிருந்து வெளிவந்த சிற்றிதழான விளக்கு இதழின் சிறப்புத் தொகுப்பாக 2002 இல் பெயர் வெளிவந்தது. அவ்விதழிலிருந்து சில பகுதிகள் உங்களின் பார்வைக்கு.......

Wednesday, April 15, 2015

சுவிஸ் ஞானலிங்கேச்சுரர் குடமுழக்கு மலரில் வெளிவந்த கட்டுரை


சுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஞானலிங்கேச்சுரர் ஆலய திருக்குடமுழுக்கு பெருவிழா 01.02.2015 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது. 

Monday, April 06, 2015

மாணவ தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு


சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின்கீழ் மாணவ தாதியர் பயிற்சியின் பொருட்டு ஆட்சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தாதிமார்சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Thursday, April 02, 2015

கலாபூசணம் வே.தங்கராசா அவர்களுக்கான பாராட்டு விழா - புகைப்படங்கள்


தம்பலகாமம் நாமகள் சனசமூக நிலையத்தினர் 2014 ஆம் ஆண்டு இலக்கியத் துறைக்கான கலாபூசண விருது பெற்ற கலைஞர் திரு.வே.தங்கராசா அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்றினை தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தலைவர் திரு.மு.வீரபாகு அவர்கள் தலைமையில் இவ்விழா காலை 10.30 மணயளவில் ஆரம்பமாகியது.

Wednesday, April 01, 2015

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா  சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

Tuesday, March 31, 2015

சம்பூர் அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கான சுற்றாடல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை


மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது 1981 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் அபிவிருத்தி செயன்முறையில் சுற்றாடல்சார் கவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கும் இதன் பணிகள்.

Friday, March 27, 2015

புகையிரத நிலைய அதிபர் தரம் 3 பதவிக்கான விண்ணப்பங்கள்


இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2015.03.27 ஆந் திகதியன்று 18 வயதிற்குக் குறையாததும் 30 வயதிற்குக் கூடாததுமான இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Monday, March 23, 2015

கதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்


கதிர்காமம் தென்னிலங்கையில் ஊவா மாகாணத்தில் உள்ள  திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின்கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற புனித பாதயாத்திரை தலமாகும்.

Thursday, March 19, 2015

தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்றம் - புகைப்படங்கள்


தம்பலகாமம் ‘கலைக்கதிர்’ இலக்கிய மன்ற ஒன்று கூடல் தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் திரு.மா.புவேந்திரராசா தலைமையில் 08.02.2015 ஆந் திகதி பிற்பகல் 02.30. மணியளவில் நடைபெற்றது.

தம்பலகாமம் பொது நூலக வாசகர் வட்டம் (20.03.2015 /9.30 AM) - புகைப்படங்கள்


புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ்சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்த காலத்தினை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தைச் சந்திக்கத் துணைகொள்ளலாம். எதிர்காலத்தைத் திட்டமிடலாம். நல்ல புத்தகங்கள் அதன் சாயங்களை நம்மில் பதியவிட்டுச் செல்லும் என்கிறார் எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள்.

Wednesday, March 18, 2015

ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு (04.07.1980) - புகைப்படங்கள்


1980 ஆண்டு அமரர்  தம்பலகாமம். க.வேலாயுதம்  அவர்கள் ஆக்கிய  ‘தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் வரலாறு’ என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் வெளியீடு செய்யப்பட்டது. 

Wednesday, March 11, 2015

Koneswaram 2015 - Photo Galleries


இதைத் தொடர்ந்து சம்பந்தர் தான் பாடிய பதிகங்களின் எட்டாவது பாடல் இராவணன் பற்றிய குறிப்பினை கொண்டிருக்கும் வகையில் அமைத்திருக்கிறார். இராவணன் தமிழ்வீரன் என்பதும், அவன் சிறந்த சிவபத்தனாகத் திகழ்ந்தான் என்பதும் புராணக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். இப்புராணக் கதை மரபினை பதிகங்களில் பயன்படுத்தும் வழக்கினை ஆரம்பித்து வைத்தவர் சம்பந்தப் பெருமானாகும். இது பிற்காலத்தில் நாயன்மார்கள் தமது பாடல்களில் இவற்றை இணைத்துக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

பகுதி - 1  வாசிக்க.... திருக்கோணேச்சரம்  2015 - புகைப்படங்கள்
பகுதி - 2  வாசிக்க...   'கோணமாமலை அமர்ந்தாரே'  2015 - புகைப்படங்கள்