Thursday, October 15, 2015

நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்


திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் அமரர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்களின் 22 கவிதைகள் அடங்கிய ‘வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்’ என்ற தலைபில் அமைந்த கவிதைத் தொகுப்பும், அவரது மகன் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் .வே. தங்கராசா எழுதிய தம்பலகாமத்தின் கலைப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் ‘போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள்’ என்ற நூலும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.


கலாசார உத்தியோகத்தர் குணபாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி பிரசாந்தி ஜெயகாந்த் அவர்களினால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்புரையை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஶ்ரீபதி நிகழ்த்த, நூல் அறிமுக உரையை கேணிப்பித்தன் கலாபூசணம் ச.அருளானந்தம், கவிமணி அ.கௌரிதாசன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வினை திரு.தி.தரணீதரன் (அறிவிப்பாளர் சூரியன் FM ) திறம்படத் தொகுத்து வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி, தகவல் தொழில் நுட்பக்கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் கௌரவ சி.தண்டாயுதபாணி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ ஜெனார்த்தனன், வரலாற்று ஆய்வாளர் கலாநிதி கனகசபாபதி சரவணபவன், திரு.நடராசா பிரதீபன் (உதவி அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம், திருகோணமலை) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியத்தினைச் சேர்ந்த பலர் கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    நிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete