Tuesday, November 27, 2012

உதயனை யானை போட்ட கல்நெருக்கம்

என்னுரை     -   ரங்கநாயகியின் காதலன்
 தம்பலகாமம்
முத்தும் செந்நெல்லும், தேனும் விளைகின்ற
தத்தி நீர்வழியும் தம்பலகாமத்தில்
கத்தும் ஓசையிலும் கதைக்கின்ற ஒலிகளிலும்
தித்திக்கும் சுவையூட்டும் செந்தமிழே நீ வாழ்க.

Monday, November 19, 2012

கரடிப் பழமொழிகள் உணர்த்தும் கருத்துக்கள்

கரடி பழமொழி

இன்றைய நாகரிக மனிதன் பல இலட்சம் ரூபா செலவு செய்து மாடிவீடுகளைக்கட்டிக் குபேர வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் மனித குலத்தின் காட்டுவாழ்க்கைச் சகாக்களான மிருகங்கள் பறவைகள் மரம் ,செடி ,கொடி வகைகளை மறந்து விடவில்லை.

Friday, November 16, 2012

சரித்திரம் படைப்பாய் என்றார்

குரு

சத்திய காமன் என்னும்
சரித்திர புருசன் ஓர் நாள்
விசித்திர மான எண்ணம்
விரைவாக மனதில் தோன்ற
தாயிடம் சென்று அவள்
தாழினைப் பற்றிச் சொல்வான்
அம்மா நான் பிரமம் பற்றி
அறிய நல்லாவல் கொண்டேன்.

Tuesday, November 13, 2012

அற்புதக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்

அற்புதக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்

‘ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள்’ சித்திரம் சிற்பம் போன்ற கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். கல்லில் கடவுள் உருவங்களைச் செதுக்கும் சிற்பக்கலை சாஸ்த்திர ரீதியானது. பலவிதமான சிறப்பியல்புகளை உடையது.

ஒரு குருவிடம் பக்தி சிரத்தையுடன் சீடனாக நெடுங்காலம் இருந்து கற்றுத் தேற வேண்டிய ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயினும் தம்பலகாமம் பொற்கேணிக் கிராமத்தில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் சிற்பக்கலையை யாரையும் குருவாகக் கொண்டு கற்காமலே கருங்கல்லில் மிகவும் சிரமம் தரும் தெய்வ உருவமான ஐங்கரக்கடவுளின் திருவுருவை அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார்.

Monday, November 12, 2012

பயனுள்ள சில இணையத்தளங்கள்!


ஆரோக்கியத் தளம்
ஆரோக்கியத் தளம் - மருத்துவ உதவிக் குறிப்புகள்


தமிழ் ,சிங்களம்  ஆகிய  மொழிகளில் மருத்துவ உதவிக் குறிப்புகளை வழங்கும் இணையத்தளம். பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை அளிப்பதுடன் ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

  இணையத்தள சுட்டி         http://wedananasala.org/home/


 உடல்நலம்
 உடல்நலம்  - வலைத்தளம்

பன்மொழி இணையத்தளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  இணையத்தள சுட்டி          http://ta.vikaspedia.in/

Thursday, November 01, 2012

கப்பல் துறை

கப்பல் துறை,திருகோணமலை

உலகின் இரண்டாவது இயற்கைத் துறைமுகம் எனப் புகழ்பெற்ற திருகோணமலைக்கும் புராணவரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. இது மிகப்பழங்காலத்தில் இக்கிராமத்திற்கு வழங்கப்பட்ட காரணப் பெயராகும்.

தம்பலகாமம் இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் ‘தம்பை நகர்’ என்ற பெயருடன் வணிகப்பெரு நகராக விளங்கியிருக்க வேண்டும் என்றும், அங்கு வாழ்ந்த தமிழ் இளைஞர்கள் கடல் துறையான கப்பல் துறையிலிருந்து கப்பல் ஊர்ந்து ‘திரைகடல் ஓடியும் திரைவியம் தேடினர்’ என்றும் , எப்பொழுதும் கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்த இடம் ‘கப்பல்துறை’ எனப் பெயர்பெற்றது எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இங்குள்ள காடுகளில் ஆங்காங்கே காணப்படும் சிதைவுற்ற கட்டடங்களும் செதுக்கப்பட்ட கற்தூண்களும் இக்கருத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.

குளக்கோட்டு மன்னன் தம்பலகாமத்தில் அமைத்த கோணேஸ்வரத்திற்குத் தீர்த்தமாகக் கப்பல்துறையில் அமைந்த ‘பாவநாச ஏரி’ப் பிரதேசம் காலஓட்டத்தில் கரைந்து காடாகி இன்று இலைமறை காயாக உள்ளதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் அற்புத உண்மையாகும்.
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரிப்பத்து வைராவியார் குடும்பத்தினர் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இத்தீர்த்தத் தடாகத்திற்குச் சென்று பொற்கல்லிட்டு வழிபாடியற்றி வருவதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.