Showing posts with label தம்பலகமம். Show all posts
Showing posts with label தம்பலகமம். Show all posts

Thursday, February 23, 2023

ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம்


எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது. 

Sunday, August 18, 2019

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.

Monday, September 16, 2013

தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி

தம்பலகாமம்

தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வின் ஒரு பகுதியாக ‘தம்பலகாமம்’ என்னும் ஊரின் வரலாற்றுத் தொன்மைதனை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம்.

Thursday, September 12, 2013

'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6

Thampalakamam

1815 ஆம் ஆண்டு பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அவற்றின் பிரதிகள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் என்ற தொகுப்பாக வெளிவந்தன.  தம்பலகாமப்பற்று வன்னிமை பற்றியும் ,அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்களாக இவ்வாவணம் விளங்குகின்றது.

Thursday, August 29, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5

குளக்கோட்டன்

திருகோணமலை வரலாற்றில் மன்னர்களின் நேரடி ஆட்சி முறை தளர்ந்தபிற்பாடு நிலமானியமுறை சார்ந்த வன்னியர் ஆட்சி தொடங்கியதெனலாம். இதனைப் பல வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. குளக்கோட்டனின் அரச பிரதானியாகிய தனியுண்ணாப் பூபாலவன்னியர் என்பவர் மூலம் திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி தொடங்கியது என்றாலும் குளக்கோட்டன் காலத்திற்கு முன்னரும், பின்னரும் இங்கு அவை தொடர்ந்திருந்திருக்கிறது எனச்சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Wednesday, August 21, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4

கலிங்க மாகன்
கலிங்க மாகன்
முதலாம் விஜயபாகு ( கி.பி 1055 - 1110 )மன்னன் காலத்தில் கந்தளாய் விஜயராசச் சதுர்வேதி மங்கலம் என்றும் அங்குள்ள சிவன் கோவில் விஜயராஜ ஈஸ்வரம் என்றும் அழைக்கபட்டது. கி.பி 1097 இல் நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை வர்ணிக்கிற சாசனம் முதலாம் விஜயபாகுவின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டதாகும்.(1)

Thursday, August 15, 2013

வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3

தம்பலகாமம்

தொல்பொருள் சாசனங்களுடன் ஒப்பிடுகையில் இடப்பெயர்கள் பெரும்பாலும் தனித்திறமையோ, நுணுக்கமோ இன்றி பொதுமக்களால் படைக்கப்படுபவை. எனவே அவை மக்களின் மொழிவழி எண்ணங்களை மிகச்சிறப்பாக உணர்த்தி நிற்கின்றது.

Tuesday, July 30, 2013

“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2

 தம்பலகாமம்

வெவ்வேறு வகையான உருவங்களைக் கொண்ட ஊர்ப்பெயர்களில் மனித இனத்தின் அனுபவம் பொதிந்துள்ளது. எனவே இடப்பெயர்கள் எல்லாம் மனிதனின் மொழிமரபையும் பண்பாட்டையும் வளர்க்கின்றன. இதனடிப்படையில் ஊர்களை இனங்காணுவது மனித இனத்தின் முக்கிய நடத்தையை உருவாக்குகின்றது.(1) என்று சொல்கிறார் திரு.ஆர். ஆளவந்தார்.

Thursday, July 25, 2013

இலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1

தம்பலகாமம்

‘எங்கே வரலாறு மௌனம் சாதிக்கத் தொடங்குகின்றதோ அங்கே இடப்பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்திறந்து பேசத்தொடங்கும்’ என்கிறார் ஊர்ப்பெயர் ஆய்வின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிடும் திரு.ஆர். ஆளவந்தார் அவர்கள்(1). உலக கவனத்தையீர்த்த இந்த இடப்பெயராய்வு (Toponymy )18 ஆம் நூற்றாண்டு முதல் ஒரு அறிவியல் துறையாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.