Showing posts with label தம்பலகாமப் பற்று. Show all posts
Showing posts with label தம்பலகாமப் பற்று. Show all posts

Sunday, August 18, 2019

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.

Tuesday, November 08, 2016

தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தின் தொல்மரபுகள் பல அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றையும் உள்ளடக்கிய பிரதேசம் “ தம்பலகாமப் பற்று” எனும் சுயாட்சி அதிகாரமுள்ள வன்னிச் சிற்றரசராக இருந்தது.