Showing posts with label தமிழ்த் தேரர்கள். Show all posts
Showing posts with label தமிழ்த் தேரர்கள். Show all posts

Tuesday, October 15, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4

இராஜராஜப் பெரும்பள்ளி

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தானம்

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.

Wednesday, October 02, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3

தமிழ் பௌத்த தேரர்கள்

பதி(பதவியா) நகரில் அமைந்த வேளைக்காற விகாரம் 

பண்டை நாட்களில் தமிழ் நகரமாக விளங்கிய பதி நகரமே  இன்று பதவியா என்றழைக்கப்படுகிறது. இங்கு பல சிவாலயங்கள் அமைந்திருந்தன. பல சமூகப்பிரிவுகளைக்கொண்டிருந்த வளர்ச்சிடைந்த பட்டினங்கள் இருந்தன. இவற்றில் ஒன்று ஐம்பொழில் பட்டினம்.

ஐம்பொழில் பட்டினம் வணிகர், பேரிளமையாளர், படைவீரர், கம்மாளர், அந்தணர் போன்ற பல சமூகப் பிரிவினர்களை கொண்டமைந்த ஒரு வீரபட்டினமாகும். இங்கு வேளைக்காறர் சிறப்பிடம் பெற்றிருந்தனர். பதவியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நூற்றாண்டிற்குரியதாகக் கருதப்படும் சமஸ்கிரத மொழிச் சாசனம் வேளைக்காற விகாரம் பற்றி விபரிக்கிறது.

Friday, September 27, 2013

'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2

புத்தர்

தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி

1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில்  மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.

கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

Wednesday, September 25, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1

Gautama Buddha

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை

திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் பெரியகுளம் பகுதி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும். இங்கு வெல்கம் விகாரை அமைந்திருக்கிறது. வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளி திராவிடக் கலைப்பாணியில் அமைந்த ஒரேயொரு 'தமிழ் பௌத்த பள்ளியாகும்'. இதன் இன்னொரு பெயர் நாதனார் கோவில் என்பதாகும்.