Showing posts with label திருக்கோணேச்சரம். Show all posts
Showing posts with label திருக்கோணேச்சரம். Show all posts

Thursday, April 04, 2024

கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம்


அமரர் இராம பிரசாந்த் அவர்களுடைய கோணநாயகனின் ஆயிரங்கால் ஆலயம் என்ற நூல் அண்மையில் வெளிவந்திருந்தது. இதனை அவரது தந்தை இரா மகேந்திரராஜா தொகுத்திருந்தார். பூபாலசிங்கம் புத்தகசாலை இந் நூலினை வெளியிட்டு இருந்தது.

Friday, March 22, 2024

போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பனில் திருக்கோணேச்சரம் சார்ந்த ஆவணங்கள்

 

1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை. 

Tuesday, October 31, 2023

1600களில் திருக்கோணேச்சர ஆலயச் சூழல்.

 

இளையவர்கள் 400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சர ஆலயச் சூழலைப் புரிந்து கொள்வதற்கான செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய காட்சிப் பதிவு. 

நட்புடன் ஜீவன்.

Friday, October 20, 2023

திருக்கோணேச்சரம் - Thirukoneswaram temple

 


400 வருடங்களுக்கு முந்திய திருக்கோணேச்சரத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கும் முயற்சி.
An attempt to design the Thirukoneswaram temple in the 17th century (1600) with the help of artificial intelligence. நட்புடன் ஜீவன்.

Friday, February 24, 2023

கோணேசர் கல்வெட்டு


கோணேசர் கல்வெட்டு என்கின்ற வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிராஜவரோதயன் அவர்களால் 17ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும், உரைநடைப் பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.

Saturday, October 08, 2022

திருக்கோணேச்சரத்தில் பணியாற்றிய தேவரடியார்கள்

கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும்  ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.

Tuesday, September 13, 2022

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மகாநாடு - புகைப்படங்கள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்திருக்கும் தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேச்சர ஆலயத்தின் வருடாந்த  மகாசிவராத்திரி வரலாற்று ஆய்வு மகாநாடு 08.02.2024 வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்புற இடம்பெற்றது. 

Friday, July 17, 2020

திருக்கோணேச்சரத்தின் அரிய வரலாற்று (1831) ஆவணம் - புகைப்படங்கள்


கடந்த காலங்களில் எமது இருப்புக்கள் தொடர்பான இடர்பாடுகள் எழும்போது பெரும்பாலும் உணர்வுபூர்வமான எதிர்வினைகளே ஆற்றப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இம்முறை திருக்கோணேச்சரத்தின் வரலாறு தொடர்பான கேள்விகள் எழுந்தபோது முன்புபோல் இல்லாது அதற்கான எதிர்ப்பினை அறிவியல்பூர்வமாக பலரும் முன்னெடுத்து வருவது நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

Thursday, July 18, 2019

1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்


ஒல்லாந்து ஆளுனர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda ( தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுனரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு (நன்றி காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்) இவ்வாறு அமைகிறது.

Wednesday, June 12, 2019

மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரிய வளமைப் பத்ததி


சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில்  இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.

Thursday, September 07, 2017

திருகோணமலையில் அகழ்வாய்வுப் பணிகள்


திருகோணமலையில் சமகாலத்தில் மூன்று இடங்களில் அகழ்வாய்வு முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது. அவை

1. திருக்கோணேச்சரம் கோட்டை மதில்
2. கந்தளாய்ச் சிவாலயம்
3. திருமங்கலாய்  சிவாலயம் என்பனவாகும்.