கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டிருக்கும். அதனை எழுதவேண்டிய கல்லின் மீது ஓவியம்போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். இவை கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்கள் என்பதனால் கல்வெட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. கல்வெட்டைச் சிலாசாசனம் (சிலை+சாசனம் = சிலாசாசனம்) எனவும் கூறுவர். இங்கு சிலை என்ற சொல் கல்லைக் குறிப்பதாயும், சாசனம் என்ற சொல் அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு எனப்பொருள்படுவதாயும் அமைந்திருக்கும்.
பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு மங்கலச்சொல், மெய்க்கீர்த்தி , அரசன் பெயர் ,ஆண்டுக் குறிப்பு ,கொடை கொடுத்தவர் ,கொடைச் செய்தி , காப்புச் சொல் ,எழுதியவர் போன்ற பகுதிகளைக் கொண்டிருக்கும். இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப்பட்டதாகும். அவற்றில் இடம்பெற்றுள்ள செய்திகளிலிருந்து, கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அவற்றின் மூலம் அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ளலாம்.
சொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி ,மெய்ப்புள்ளி இடும் வழக்கமோ கல்வெட்டுக்களில் இருப்பதில்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகளில் மெய்ப்புள்ளி எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றின் வரிவடிவம் அவை எழுதப்பட்ட காலத்திற்கேற்ப வேறுபாட்டைக் கொண்டிருக்கும்.
உலகில் இன்றுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகளைக் கொண்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் திருகோணமலையிலேயே பெரும்தொகையான தமிழ்ச் சாசனங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்தவை போல் பலமடங்குச் சாசனங்கள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

அண்மையில் நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் உடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் தலைமையில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்று நடைபெற்றது. இதில் கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களான திரு.தனுராஜன், திரு.பசில், திரு.செல்வகுமார் ஆகிய மூவரும் ஆர்வத்துடன் இணைந்திருந்தனர். வழமை போலவே குறுகிய நேரத்தில் மிக விறுவிறுப்பாக நடந்தேறிய பயண நிகழ்வுகள் வாழ்வில் மறக்கமுடியாதவையாகும்.
கல்வெட்டியல் அல்லது சாசனவியல் (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது உலோகங்களில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறையாகும். இத்துறை பண்பாடு மற்றும் கால அடிப்படையில் கல்வெட்டுக்களை வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெறல் என்பனவற்றிற்கு உதவுகிறது.
கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் மூவரும் கடுமையான வெயிலையும், பசியையும் பொருட்படுத்தாது ஆறுதலாகவும், ஆர்வத்துடனும் கல்வெட்டுக்களைப் படி எடுப்பதுபற்றி விளக்கம் தந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினை கழுவிச்சுத்தப்படுத்தி அதன் மீது நீரில் ஊறவிடப்பட்ட மையப்படி எடுக்கும் தாளினை விரித்து அதன்மீது மையை ஒற்றி எடுக்கும் கல்வெட்டுக்களைப் படி எடுக்கும் செயல்முறையினை விளக்கினர்.
கிழக்குப்பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்கள் மூவரும் கடுமையான வெயிலையும், பசியையும் பொருட்படுத்தாது ஆறுதலாகவும், ஆர்வத்துடனும் கல்வெட்டுக்களைப் படி எடுப்பதுபற்றி விளக்கம் தந்தனர். கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டினை கழுவிச்சுத்தப்படுத்தி அதன் மீது நீரில் ஊறவிடப்பட்ட மையப்படி எடுக்கும் தாளினை விரித்து அதன்மீது மையை ஒற்றி எடுக்கும் கல்வெட்டுக்களைப் படி எடுக்கும் செயல்முறையினை விளக்கினர்.
த.ஜீவராஜ்
பயணம் தொடரும்............
அருமையான பதிவு!
ReplyDeleteபொதுவாக, இப்படிப்பட்ட பதிவுகளை யாரும் அவ்வளவாகப் படங்களுடன் வெளியிடுவதில்லை. ஆனால், கல்வெட்டிலிருந்து படியெடுக்கும் முறைகள் பற்றிய விளக்கமான இத்தனை படங்களுடன் நீங்கள் இதை எழுதியிருப்பது சிறப்பு! நன்றி!
வணக்கம்
ReplyDeleteஐயா.
தங்களின் தேடல் முயற்சி மூலம் தமிழ்ர்கள்ளுடைய வரலாற்றுப்பொக்கிஷம் என்றென்றும் பாதுகாக்கப்படும் அறிய முடியாத ஆதாரங்களை அறிய முடிகிறது. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பு....
ReplyDeleteபுதிய தகவல் படங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. தொடருங்கள்..
சிறப்பான பதிவு தொடருங்கள்...நன்றி
ReplyDeleteஅகழ்வாராய்ச்சியின் பகுதியாகக் கொள்ளப்படத்தக்க இவ்வாய்வும் எனக்கு மிகவும் பிடித்தமானதொன்று.பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteநன்றி நண்பா
Delete