Wednesday, October 04, 2017

நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு


திருகோணமலையின் மூதூர் கிழக்கிலுள்ள கிராமங்களில் ஒன்றான  இலக்கந்தையில் நிலவும்  குடிநீர்ப் பிரச்சனை தொடர்பான காணொளிப்பதிவு இது.

2006 இல் இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் இவ்வூர் மக்களை பலத்த  பொருளாதார, உயிர் இழப்புகளுடன் வாகரை ஊடாக மட்டக்களப்பு நோக்கி அகதியாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கிளி­வெட்டி முகாமில் தங்கவைக்­கப்­பட்ட இம்மக்கள் 2009 ஆம் ஆண்டுமுதல் பல்வேறு கட்டங்களாக மீள்குடியமர்த்தப்பட்டார்கள்.


யுத்தமும், இடப்பெயர்வும் இவர்களது வாழ்வினைச் சீர்குலைத்துவிட்டது.  யுத்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், உடமை இழப்புகள் தவிர்த்து போதிய ஊதியமின்மை, குடிநீர்வசதி, போக்குவரத்து, மருத்துவம், மின் இணைப்பு என்பன கிடைப்பதிலுள்ள பிரச்சினைகள், சிறுவர்களின் போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல், இளவயது திருமணம், சமூர்த்தி வசதி மறுப்பு, முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சினை, காணி அபகரிப்பு என்று நீண்டு செல்கிறது அக்கிராம மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள்.

நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் - காணொளிப்பதிவு

04.10.2017 அன்று வீரமாநகரைச் சேர்ந்த திரு க.பண்பரசன் காண்டீபனால்  நீரின்றித் தவிக்கும் இலக்கந்தை மக்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட  காணொளிப்பதிவு இது.



இக்காணொளிப்பதிவினைப் பார்த்தபின் இந்த அவலம் தொடர்பில் நம்முன் உள்ள நடைமுறைச் சாத்தியமான வழிகள் சில.......

01. இலக்கந்தை கிராமத்தில் மூன்று குழாய்க் கிணறுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே பாவனையில் உள்ளது. எனவே பழுதான இரு குழாய்க் கிணறினையும் திருத்தம் செய்ய முயற்சிக்கலாம்.

02. பொதுக்கிணறு இரண்டும், பாடசாலைக் கிணறு ஒன்றும் அக்கிராமத்தில் இருக்கிறது. இவற்றில் ஒன்றில் மட்டுமே ஒரு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருக்கிறது. எனவே இவற்றினை ஆழப்படுத்தி உதவலாம்.

03. குழாய் நீர் வசதிபெற உதவலாம்

04. இவையெல்லாம் நடைமுறைச்சாத்தியம் அடையும்வரை தற்காலிகமாக அம்மக்கள் குடிநீர் வசதிபெற உதவலாம்.



உதவும் மனம் படைத்த நல்லுள்ளங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம். 
'' நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு ''
வான்சிறப்பு - திருக்குறள்


நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. இன்று வரை அரசியல் வாதிகளை நம்பி நம்பி ஏமாந்தவர்களாக சொந்த ஊரையுமிழந்து குடிநீருக்கே அல்லாடும் நிலையில் தவிக்கும் இம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்

    ReplyDelete