Thursday, August 02, 2012

வாழும் வழி தெரியணும்


ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்



எலியின் வாடை அடிக்கவே
ஏப்பம் வேறு விட்டனர்
சலிப்பில்லாமல் ஆலம் சருகிலே
சரிந்து கண்ணை மூடினர்

சிறிது நேரம் சென்ற பின்
சின்னப் பொந்தில் இருந்து ஓர்
எலியார் எட்டிப் பார்த்தனர்
எவருமில்லை என்றெண்ணி

மெல்ல வெளியே வந்தனர்
மேவி நாலு திசையிலும்
பொல்லாப் பூனை இருப்பதை
புரிந்திடாமல் அலைந்தனர்

மின்னல் வேகப் பாய்ச்சலில்
வீரப் பூனை பாய்ந்தனர்
என்ன செய்வோம் ஐயகோ!
எலியார் பூனை வாயிலே

கண்ணை மூடிப் படுப்பினும்
கயவரோடு கவனமாய்
மண்ணில் வாழப் பழகனும்
வாழும் வழி தெரியணும்.
வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. இறக்குவானை நிர்ஷன்September 7, 2008 11:26 PM
    ஈழத்திலிருந்து இன்னொரு பதிவரின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

    உங்கள் தரமான எழுத்துக்கள் தொடரட்டும்.

    ReplyDelete

    வேலாயுதம் -தங்கராசாSeptember 7, 2008 11:53 PM
    நன்றி நிர்ஷன்

    ReplyDelete