Wednesday, August 01, 2012

ஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்



வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் வருடாந்த பிரமோற்ஸபம் இம்முறை இடம் பெறவில்லை.

இதற்குப்பதிலாக பிரம்மோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 26.06.2012 தொடக்கம் 16.07.2012 திங்கட்கிழமை வரை 21 தினங்களுக்கு காலை 9.00 மணிமுதல் விஷேட அபிஷேக அலங்கார பூசை என்பன நடைபெறவுள்ளது.  தேர்த் திருவிழா தின அபிஷேகம் காலையிலும், கொடியிறக்க அபிஷேகம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெறும்.
பிரமோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆனி உத்தரத்தில் இடம் பெற்ற அபிஷேகத்தை ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சிவாச்சாரிய மணி பொன். ந. சிவசிறிக்குருக்கள் நிறைவேற்றி வைப்பதையும் உபயகாரர் திரு. கதிர்காமத்தம்பி கோணநாயகம் மற்றும் தொழும்பாளர்கள் அருகே நிற்பதையும் படங்களில் காணலாம்.









வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment