Thursday, August 02, 2012

வாழ்வாங்கு வாழும் வழி


விடியற்காலை நாலு மணிக்கு
விழிக்க வேண்டும் தோழரே
கடிதிற் காலைக் கடன்கள் முடித்து
கடவுள் பாதம் தொழுவமே.


சிறிது நேரம் தியானம் செய்து
சிந்தனையை வெல்லுவோம்
அரிது இந்தப் பிறவி நமக்கு
அதனைப் போற்ற வேண்டுமே

ஒழுக்கமாக வாழ்வ தொன்றே
உலகில் உயர்வு தந்திடும்
பழக்கம் நல்லதாயின் இந்தப்
பார் புகழும் நம்மையே
.
சத்தியத்தைக் கடைப்பிடித்து
சான்றோராக வாழலாம்
நித்தியமாய் வாழ்ந்துலகில்
நிறையப் புகழைச் சேர்க்கலாம்
.
வாழ்வாங்கு வாழும் வழி
வாழவேண்டும் தோழரே
நாளும் கோளும் உதவுமே
நாமும் சிறந்து வாழலாம்.

 வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment