Wednesday, August 01, 2012

வள்ளுவர்


வள்ளுவராம் வள்ளுவர்
வான் புகழ் கொண்டவர்
தெள்ளு தமிழ் மொழியிலே
தீங் கவிதை தந்தவர்.


அறம் பொருள் இன்பத்தை
அகிலம் போற்றச் செய்தவர்
திறமை கொண்ட நூலினை
தேசம் போற்றச் செய்தவர்.

தமிழ் வேதம் சொன்னவர்
தரணி போற்றும் நாயகர்
அமிழ்தம் போன்ற தமிழினை
அகிலம் புகழச் செய்தவர்

கல்விதான் கண்ணெனக்
கடிந்து நமக்குச் சொன்னவர்.
சொல்லும் செயலு மொன்றெனத்
தூயராக வாழ்ந்தவர்.

முயற்சி யொன்றே மனிதனை
முழுமையாக்கும் என்றவர்
உயர்ச்சி வாழ்வில் அடையவே
உரிய வழிகள்உரைத்தவர்.

வள்ளுவரைப் போற்றுவோம்
வளரும் தமிழை நேசிப்போம்
உள்ளம் உயர முயற்சிப்போம்
உலகம் போற்ற வாழலாம்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment