Monday, August 13, 2012

எங்கள் ஆசான்


எங்கள் ஆசான்

எங்கள் ஆசான் இனியவர்
எதற்கும் அஞ்சா நெஞ்சினர்
கண்கள் போலும் கல்வியைக்
கற்றுத் தரும் பண்பினர்


அறிவுக் கண்ணைத் திறந்திட
ஆர்வமுடன் உழைப்பவர்
நெறிகள் சொல்லித் தருபவர்
நினைவில் என்றும் நிறைந்தவர்.

கதைகள் மூலம் கல்வியைக்
கற்றுத் தரும் இயல்பினர்
புதையல் போன்ற கல்வியை
புகட்டி எம்மைக் காப்பவர்

ஒழுக்கம் சொல்லித் தருபவர்
உயிர் போலதனைக் கொள்பவர்
பழக்கம் நல்ல கற்றுத்தந்து
பார் புகழச் செய்பவர்

அன்பில் சிறந்த அன்னையர்
ஆற்றல் மிக்க தந்தையர்
பண்பில் சிறந்த சான்றோராய்ப்
 பலரும் போற்றும் பண்பினர்.

எண்ணும் எழுத்தும் அறிந்திட
எமக்கு உதவும் ஆசானை
கண்போல் நாமும் போற்றுவோம்
கடவுள் என்றே வாழ்த்துவோம்.

வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment