Thursday, August 02, 2012

வேளை தோறும் பண்புகள்


பாலர் நாங்கள் கூடி நின்று
பாடிப் பாடி ஆடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்


தேவை நமக்கு உடல் நலம்
தினமும் அதனைப் பேணணும்
பாவை போலச் சுழன்று ஆடிப்
பரவசமும் அடையணும்

காலை நேரம் எழுந்ததும்
கடவுள் நாமம் சொல்லுவோம்
மாலை முழுதும் விளையாடி
மகிழ்ச்சியோடு வாழுவோம்

அன்னை பிதா தெய்வமாம்
ஆசிரியரும் தெய்வமாம்
எம்மைக் காக்கும் தெய்வத்தை
என்றும் தொழுது போற்றுவோம்

நாளை உலக நாயகர்
நாங்கள் என்று சொல்லுவோம்
வேளை தோறும் பண்புகள்
வேண்டிக் கற்று உயருவோம்
வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. VIKNESHWARANSeptember 12, 2008 5:43 AM
    அருமையான சிறுவர் பாடல்...

    ReplyDelete

    வேலாயுதம் -தங்கராசாSeptember 12, 2008 6:01 AM
    நன்றி உங்கள் நல்வாழ்த்துக்கு

    ReplyDelete

    Tamil Short FilmSeptember 12, 2008 8:04 AM
    Super Song.. I like it

    ReplyDelete

    வேலாயுதம் -தங்கராசாSeptember 12, 2008 6:01 PM
    thanks

    ReplyDelete