Showing posts with label நிருபர். Show all posts
Showing posts with label நிருபர். Show all posts

Friday, May 16, 2014

5 ஆம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 )  - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

மைந்தனைப் பறிகொடுத்து
மார்பினில் அறைந்தரற்றும்
பைந்தமிழ் அன்னைக் கிந்தப்
பாரினில் துணையுமுண்டோ?
எந்தையே! தமிழருக்காய்
இயன்றிடப் பாடுபட்ட
தந்தையே! நின் பிரிவால்
தவிக்குதே! தமிழர் நெஞ்சம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார்.

Saturday, May 18, 2013

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

நான்காம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 )  - அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.

Sunday, May 24, 2009

தமிழறிஞர் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்

Thampalakamam
‘இந்த மண்ணுலகம் இறைவன் படைத்துவைத்த மேடை. இந்த உலகம் என்னும் நாடகமேடையில் மாமனிதர்கள் தோன்றி நடித்து வியத்தகு சாதனைகள் புரிந்து காலத்தால் மறையாத காரியங்கள் பல ஆற்றியுள்ளனர். உண்டு,உடுத்து, உறங்கி, இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலானோர் கிடைத்தற்கரிய மனித வாழ்க்கையைப் பாழ் செய்தாலும், கணிசமானவர்கள் தாங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்குத் தொண்டாக உலக முன்னேற்றத்துக்கு உகந்த முறையில் கடனாற்ற வேண்டியது நியதியாகும்.’  என தம்பலகாமம் தந்த தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் தனது ‘இந்திய ஞானிகளின் தெய்வீகச் சிந்தனைகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் யாவும் பிரம்மத்தின் கூறுகள்தாம். இதனை அவரே பிரமத்தை விளக்குவதற்குப் பல உதாரணங்களைத் தந்து இராமகிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரன் என்னும் சுவாமி விவேகானந்தருக்குச் சொல்லிய’ நானும் பிரம்மம், நீயும் பிரம்மம், இந்தச் சுவர்கூடப் பிரம்மத்தின் ஒரு பகுதிதான் என விளக்குகிறார். தமிழறிஞர் அமரர் கனகசபை வேலாயுதனார் எவ்வளவு பெரிய மேதை என்பதை இவரது நூல்களை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். 

Tuesday, May 19, 2009

துயர்பகிர்வு

தம்பலகாமம்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் இன்று(19.05.09) தம்பலகாமம் குஞ்சடப்பன்திடலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் நான்கு மணியளவில் நல்லடக்கத்துக்காக முள்ளியடி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பேரன் த.ஜீவராஜ்.


Saturday, November 15, 2008

மூத்த எழுத்தாளர் தம்பலகாமம் க.வேலாயுதம் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு...

 திருமலை தம்பலகாமம் குளக்கோட்டன் வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞானவிநாயகர் ஆலயத்தில் பொங்கல்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.