Wednesday, May 24, 2023

ஆழி மழைக்கண்ணா! - (ஆதினி பகுதி 9)


அறிவாட்டி பூமகள் நரபலியானதைச் சொல்லி முடித்த கடைசி நிமிடங்களில் ஆதினி மூச்சு விடவும் மறந்து போயிருந்தாள். குளிரில் நனைந்த கோழிக்குஞ்சாக அறிவாட்டியின் மடியில் தஞ்சமாகி இருந்த ஆதினிக்கு அடுத்து என்ன நடந்தது என்று கேட்பதற்கே தயக்கமாக இருந்தது.

Tuesday, May 16, 2023

எல்லைக்கல் - (ஆதினி பகுதி 4)


வழமைபோலவே வாசுதேவ வாய்க்காலுக்கு வந்த ஆதினி  எந்த அச்சமும் இன்றி முதலை அவளைக் கடிக்கத் துணிந்த அதே மரத்தின் கீழ் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்ததுபோல அந்தக் காலைப் பொழுதில் எந்த அதிசயமும் நடக்காததால் வழக்கம்போல தோல்பையில் கீரைவகைகளை பறித்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானாள். அப்போது அவள் பின்னால் இருந்து ஒரு குரல் ‘உனக்கு பயமே வரவில்லையா’ என்று கேட்டது. திரும்பிப் பார்த்தாள் நேற்றைய தினம் தன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞன் எதிர்க்கரையில் நின்று கொண்டிருந்தான்.

வாசுதேவ வாய்க்கால் - (ஆதினி பகுதி 3)


ஆதினியை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் அவளுடைய பிடிவாதம். சிறுவயதிலிருந்தே ஆதினியின் பிடிவாதம் ஊருக்குள் பிரபல்யம். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்திப் பலமுறை கோமதி தடுத்தும் அதை ஆதினி கேட்பதாக இல்லை. பொழுது புலர்ந்து கேசவன் வேலைக்குப் போய்விட்டதன் பின்னர் வழக்கம்போல ஆதினி வாசுதேவ வாய்க்காலுக்கு வந்துவிட்டாள். அங்கிருக்கும் மிகப் பெரிய ஆலமரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் கால்வாய் ஓரங்களில் இருக்கும் இலைக்கறிகளை காலைச்சமையலுக்காக வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டவளாக  எந்தவித பதட்டமும் இல்லாமல் பாட்டுப்பாடியபடி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள் அவள்.

இடையர்கல் - (ஆதினி பகுதி 2)


கதை கேட்கிற அவசரத்தில 1996 என்று நினைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. ஆதினியின் கதை இன்றைக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கந்தளாயில் நடந்தது.

கி.பி 1096 ஆவணி மாதம் நான்காம் திகதி மாலை நேரம்.

மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு பிரம்மாண்டமான அணைக்கட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் கந்தளாய் குளம் மாலை நேரச் சூரிய ஒளியில் மனதுக்கு இதமான காட்சியைத் தருகிறது. கந்தளாய்க் குளக்கட்டின் ஊடாகச் செல்கின்ற பெருந்தெரு நம்மை பிராமணர்கள் வாழ்கின்ற சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேயத்திற்குள் கொண்டு சேர்க்கிறது.

Wednesday, May 03, 2023

நரபலி - (ஆதினி பகுதி 8)


திடுக்கிட்டு எழுந்தேன். தலையை தடவிக் கொண்டிருந்த கனகவல்லிப் பாட்டி ஆதரவோடு என் தோள்களைப் பிடித்து அமரச் செய்தாள். பூக்கட்டிப் பாத்துட்டாங்களா பாட்டி என்று பயத்தோடு கேட்டேன். 

ம்...... நீ எழும்பிறதிற்கு கொஞ்சம் முதல்தான் பறையொலி பெரிசாக கேட்டது. பூக்கட்டி பார்த்துட்டாங்கண்ணு நினைக்கிறன்.

எனக்கு நெஞ்சு நின்று விடும் போலிருந்தது.

யார் மேல பாட்டி பூ விழுந்திருக்கும்? 

Saturday, April 01, 2023

வைராவியர் குலமகள் (பூமகள்) - (ஆதினி பகுதி 7)


நரபலி கதையை அறிவாட்டிப் பாட்டி சொல்வதாகச் சொல்லி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆதினி குட்டி போட்ட பூனையாக அறிவாட்டியின் வீட்டில் நாள்தோறும் வலம் வந்து கொண்டிருந்தாள். அறிவாட்டியை தனிமையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமையாமலேயே போய்க்கொண்டிருந்தது. உறவு என்று சொல்ல யாருமே இல்லாமல் இடையர்கல்லிற்கு வந்த அறிவாட்டிப் பாட்டியின் ஆரம்ப நாட்கள் பற்றி முன்னம் கோமதி சொல்ல ஆதினி கேட்டிருக்கிறாள்.வாசுதேவ வாய்க்கால் பெருக்கெடுத்து பயிர் நிலங்களையும், கால்நடைகளையும் நாசம் செய்து ஊரில் பஞ்சம் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த நாளொன்றில் அறிவாட்டி ஊருக்கு வந்ததாகச் சொன்னாள்.

Tuesday, March 14, 2023

1865 - 1895/6 தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல் - pdf ஓலைச்சுவடிகள்


கோணை முத்துக்குமாரசுவாமி பொன்னூஞ்சல்  ஆசிரியரான திரு.தி. த. சரவணமுத்துப்பிள்ளை  (1865 - 1895/6) இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுப் புதினமான மோகனாங்கி என்ற புதினத்தை 1895 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டவர்.

Tuesday, March 07, 2023

1846 இல் சிவன் கோயில் சொத்துக்கள் பற்றிய விபரம் - pdf ஓலைச்சுவடிகள்


திருகோணமலை நகரப் பகுதியில் புகழ்பெற்ற விசுவநாத சுவாமி சிவன் கோயில் தொடர்புடைய வளமைப் பத்ததி எனும் ஓலைச்சுவடி அண்மையில் வாசிக்க கிடைத்தது. இது வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் திரட்டிலிருந்து திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன்  அவர்களுக்கு ஊடாக எமது பார்வைக்கு கிடைத்திருந்தது.